மத்திய கிழக்கு

ஓமானில் சீரற்ற வானிலையால் 17 பேர் உயிரிழப்பு!

  • April 16, 2024
  • 0 Comments

ஓமானில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அண்டை நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அரேபிய தீபகற்பத்தின் பிற பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் சீற்ற வானிலையால் பலர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

ஒரு நாளைக்கு ஒரு இலட்சம்… அதுக்கும் மேல… என்னங்க சொல்லுறீங்க?

  • April 16, 2024
  • 0 Comments

வெளிநாடுகளுக்கு சென்று பட்டப்படிப்பை முடித்த ரேஷ்மா பசுபுலேட்டி, ஆரம்ப காலத்தில் சாஃப்ட்வேர் வேலையில் ஈடுபட்டிருந்தார். அதன் பிறகு பிரபல டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் இவர் பணிபுரிந்தார். அதன் பிறகு சின்னத்திரை நாடகங்களில் அறிமுகமான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “மசாலா திரைப்படம்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தற்பொழுது வரை மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து […]

இலங்கை

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

  • April 16, 2024
  • 0 Comments

கல்கிஸ்ஸ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பொருபன இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது இனந்தெரியாத இருவர் வந்து இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (16) அதிகாலை வேளையில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆசியா

மியான்மரில் ராணுவ தளபதி கலந்து கொண்ட விழாவில் மர்ம நபர்கள் வெடிகுண்டு தாக்குதல்: நால்வர் பலி

  • April 16, 2024
  • 0 Comments

மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ராணுவ தளபதி மின் ஆங் ஹலைங் தலைமையிலான ஆட்சி அங்கு நடந்து வருகிறது. இதற்கிடையே தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன்படி மாண்டலே பிராந்தியத்தில் […]

இலங்கை

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

  • April 16, 2024
  • 0 Comments

தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதனால் இன்று இலங்கையிலும் தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது. இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்க கிராம் 25,160 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண்  201,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் 23,070 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் 184,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை […]

இலங்கை

புத்தாண்டு காலத்தில் இலங்கையில் அதிகரித்துள்ள வருமானம்!

  • April 16, 2024
  • 0 Comments

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 80 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார இன்று (16.04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த வருடம் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான 06 நாட்களில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 235 மில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உலகம்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றிப்பெற வேண்டும் – லிஸ் ட்ரஸ் வலியுறுத்தல்!

  • April 16, 2024
  • 0 Comments

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற வேண்டும் என பிரித்தானிய முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் டிரம்புடன் “உலகம் பாதுகாப்பானது” என்று அவர் கூறியுள்ளார். பிரித்தானியாவில் மிகக் குறுகிய காலம் பிரதமராக பதவி வகித்த ட்ரஸ், மோதல்களால் உலகம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், முன்பை விட இப்போது “வலுவான அமெரிக்கா” தேவைப்படுவதாகவும் கூறுகிறார். நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக […]

ஆஸ்திரேலியா

சிட்னி கத்தி குத்து தாக்குதல் தொடர்பில் அவுஸ்ரேலிய பொலிஸார் வெளியிட்ட தகவல்!

  • April 16, 2024
  • 0 Comments

சிட்னியின் புறநகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் பயங்கரவாத செயல் என  ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர். மதவெறியை அடிப்படையாக வைத்து இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக போலீசார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர். நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் கரேன் வெப் கூறுகையில், “எல்லா உண்மைகளையும் ஆய்வு செய்த பிறகே” இந்த முடிவு எட்டப்பட்டது. சந்தேக நபர் பொலிஸாருக்கு தெரிந்த 16 வயதுடையவர் என அவர் தெரிவித்துள்ளார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் பேராயர் உள்பட  […]

இலங்கை

புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு ;மகனை ஊக்குவிக்க சென்ற இடத்தில் தந்தைக்கு நேர்ந்த கதி!

  • April 16, 2024
  • 0 Comments

புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வின் போது துரதிஷ்டவசமான மரணம் ஒன்று பெல்மடுல்ல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. பெல்மடுல்ல படலந்த பிரதேசத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட தனது மகனை ஊக்குவிக்க வந்த தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த தந்தை தனது 16 வயது மகனை பாதுகாக்கவும், ஊக்குவிற்பதற்காகவும் அவருடன் இணைந்து ஓடியுள்ளார். இதன்போது, 60 வயதுடைய தந்தை திடீரென மயக்கமடைந்து […]

இந்தியா

இந்தியாவில் படகு விபத்து : குழந்தைகள் உள்ளிட்ட சிறுவர்கள் குழு மாயம்!

  • April 16, 2024
  • 0 Comments

இந்தியாவில் படகு விபத்தில் குழந்தைகள் உட்பட சிறுவர்கள் குழுவொன்று காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கந்தபாலிலிருந்து பத்வாரா நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவர்களைக் கண்டறியும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.