இலங்கை

இலங்கையில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • February 25, 2024
  • 0 Comments

தற்போதைய அரசியல் குழப்பத்தை கருத்தில் கொண்டு பல அமைச்சர்கள் அரசியல் கூட்டணியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர். தேர்தல் நடக்குமா, நடக்காதா, எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என்ற உறுதியான சூழலுக்கு இதுவரை யாராலும் வரமுடியவில்லை. தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடாததே இதற்கு காரணம். எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாகவும், அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் பொதுத் தேர்தலை நடத்துவதாகவும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தார். இதனை ஜனாதிபதி நேற்று (24.02) […]

ஐரோப்பா

கனேடிய பிரதமருடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உக்ரைன்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கனடா, இத்தாலி, பிரித்தானியா , ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுடன் இணைந்து 10 வருட பாதுகாப்பு ஒப்பந்தத்தை கிய்வ் உடன் செய்துகொண்டது. மேற்கத்திய இராணுவக் கூட்டணியான நேட்டோவில் உறுப்பினராக வேண்டும் என்ற நோக்கத்தை அடையும் வரை உக்ரைனின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை

வருடாந்தம் நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்லும் இலங்கையர்களில் 41 சதவீதமானவர்கள் தொழில் வல்லுநர்கள் அல்லது ஏதோ வகையில் திறமைமிக்கவர்கள் என புலம்பெயர்ந்து செல்லும் இலங்கையர்கள் தொடர்பான அறிக்கையொன்றில் தெரியவந்துள்ளது. வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாகவும், 2023ஆம் ஆண்டில் மாதாந்தம் வெளிநாடு சென்றோரின் எண்ணிக்கை 25,000ஆக உயர்ந்திருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வருடத்தில் சுமார் மூன்று இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் அல்லது […]

தமிழ்நாடு

சென்னையில் பயங்கரம்… மாற்று சமூக பெண்ணை மணந்த இளைஞர் ஆணவப்படுகொலை..!

  • February 25, 2024
  • 0 Comments

சென்னையில் வேறோரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த பட்டியலின வாலிபர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பிரவீன்(26). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஜல்லடம்பேட்டை பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தை சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் பள்ளிக்கரணை பகுதியில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். பெண் வீட்டாருக்கு ஷர்மி வேறொரு […]

பொழுதுபோக்கு

நடிகைகளை காதலியாக நினையுங்கள்.. திரிஷா பிரச்னையில் மிஷ்கின் செம பேச்சு

  • February 25, 2024
  • 0 Comments

நடிகை திரிஷா கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம்வந்துகொண்டிருக்கிறார். த்ரிஷாவை பொறுத்தவரை தன்னுடைய கரியரில் பல போராட்டங்களை சந்தித்தவர். அவர் பீக்கில் இருந்தபோது அவர் தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால் அதையெல்லாம் கண்டு அசராத அவர் தனது திறமையால் இன்னமும் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில், சேலம் மாவட்ட அதிமுகவின் முன்னாள் நிர்வாகி ஒருவர் திரிஷா மீது அவதூறை கிளப்பினார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையையும், கண்டனத்தையும் பெற்றுக்கொடுத்தது. […]

இலங்கை

கொழும்பில் துப்பாக்கிச் சூடு சம்பவம் – ஒருவர் படுகாயம்

  • February 25, 2024
  • 0 Comments

கொழும்பு – ஜம்பட்டா தெரு பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட அமெரிக்கா

அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் டிரம்ப் முன்னிலை

  • February 25, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அதிபர் டிரம்ப் களம் இறங்கியுள்ளார். அக்கட்சியின் வேட்பாளர் தேர்வில், டிரம்புக்கு அதிக ஆதரவு உள்ளது. எனவே, அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என கருத்துக்கணிப்புகளும் கூறி வருகின்றன. இந்தநிலையில் […]

ஐரோப்பா

பிரான்சில் வெடித்த மாபெரும் போராட்டம்! கடும் நெருக்கடியில் பொலிஸார்!

  • February 25, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் வருடாந்திர விவசாய கண்காட்சியை விவசாயிகள் குழு ஒன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகளை கண்காட்சிக்குள் நுழைய விடாமல் தடுக்க பிரெஞ்சு பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. விவசாயிகளின் வருமானக் குறைப்பு, பருவநிலை மாற்றம், விவசாயத் துறையில் முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு ஆதரவு அளிக்கக் […]

இலங்கை

இலங்கையில் கல்வியை டிஜிட்டல் மயமாக்குவது குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

  • February 25, 2024
  • 0 Comments

கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடித் திட்டம் மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். காலி, தவலம வித்யாராஜா தேசிய பாடசாலையில் புதிய தொழில்நுட்ப பீட கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், இந்த திட்டத்தின் ஊடாகஆசிரியர்களுக்கான பயிற்சியும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்றார்.  

இலங்கை

இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை!

  • February 25, 2024
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர்கள் சபையின் அங்கீகாரத்துடன் தொழிற்சங்கங்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எழுத்துமூலம் அவகாசம் கோருமாறு ஆளுநர் சபையினால் விடுக்கப்பட்ட நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய வங்கியின் ஆளுநர் கடந்த 22ஆம் திகதி நிதியமைச்சராக கடமையாற்றும் […]

error: Content is protected !!