திருகோணமலை நோக்கி பயணித்த ரயில் மோதுண்டு சிறுவன் பலி!
தம்பலகமுவ மொல்லிப்பொத்தானை புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளது. கெலிஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளது. யுனிட் 07 மொல்லிப்பொத்தானை பிரதேசத்தில் வசித்து வந்த மாணவரே உயிரிழந்துள்ளார். தம்பலகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்













