இலங்கை

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி லொறி சாரதி பலி – பொலிஸ் உப பரிசோதகர் கைது!

  • January 18, 2024
  • 0 Comments

பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் லொறி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (18) மாலை தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நாரம்மல பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற சிறிய ரக லொறி ஒன்றை பொலிஸார் துரத்திச் சென்று தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர், லொறியின் சாரதியை சோதனை செய்தபோது, பொலிஸ் உப பரிசோதகரின் துப்பாக்கி இயங்கியதில் சாரதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் உப பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் […]

ஐரோப்பா

ஸ்பெயின் செல்லும் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

  • January 18, 2024
  • 0 Comments

ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு உள்துறை அலுவலகம் அவரசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் கொரோனாவைரஸ் தொற்று மற்றும் ப்ளூ காய்ச்சல் அதிகரித்து வருவதால் அந்நாடு மீண்டும் மாஸ்க் விதிகளை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக மருத்துவ அமைப்புகளில் மாஸ்க் அணியும் விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, ஸ்பெயினுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், குறிப்பாக மருத்துவ அமைப்புகளுக்குச் செல்லும்போது மாஸ்க் அணியவேண்டும் என்றும், மாஸ்க் விதிகள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக இருப்பதால், […]

ஆசியா

இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை: 25,000 பாலஸ்தீனியர்கள் பலி

அக்டோபர் 7 முதல் காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையால் கிட்டத்தட்ட 25,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 1.9 மில்லியன் மக்கள் அல்லது காசாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 85%, இஸ்ரேல் இராணுவம் வெளியேற உத்தரவிடத் தொடங்கியதிலிருந்து உள்நாட்டில் இடம்பெயர்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் ஒரே இரவில் மேலும் 48 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கைது செய்துள்ளதாக பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

இந்தியா

ரயிலில் பயணிகள் மீது தாக்குதல்; வைரல் வீடியோவால் டிக்கெட் பரிசோதகர் மீது அதிரடி நடவடிக்கை!

  • January 18, 2024
  • 0 Comments

ரயிலில் டிக்கெட் இன்றி பயணித்ததாக பயணிகளை அடித்து தாக்கிய டிக்கெட் பரிசோதரின் வீடியோ வைரலானதை அடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. பரவுனி-லக்னோ விரைவு ரயில் உத்தரபிரதேசத்தின் கோண்டா மற்றும் பராபங்கி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது பிரகாஷ் என்பவர் டிக்கெட் பரிசோதராக அந்த ரயிலில் பணியில் இருந்தார். ரயிலில் பயணித்த சில இளைஞர்கள் உரிய பயணச்சீட்டு இன்றி பயணித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை டிக்கெட் பரிசோதகர் பிரகாஷ் கடுமையாக […]

உலகம்

ஜாம்பியாவை மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்… 400-ஐ கடந்த இறப்புக்களின் எண்ணிக்கை

  • January 18, 2024
  • 0 Comments

ஆப்பிரிக்க நாடான ஜாம்பியா பெரும் காலரா பாதிப்பால் தத்தளித்து வரும் நிலையில், இதுவரையில் 400 க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பாதிப்பால் 10,000 க்கும் மேற்பட்டவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலரா பாதிப்பால் நாடு முழுவதும் பாடசாலைகள் மொத்தமாக மூடப்பட்டுள்ளது.இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கால்பந்து மைதானமொன்று மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஜாம்பியா அரசாங்கமானது தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி சேவையை முன்னெடுத்து வருகிறது. அத்துடன் நாளுக்கு 2.4 மில்லியன் சுத்தமான குடிநீரும் […]

இந்தியா

பிரதமர் மோடி சென்னை வருகை: போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

பிரதமர் மோடி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னைக்கு பயணம் இதனால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வரவுள்ளார். இதில் தமிழக ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர். பிரதமரின் சென்னை வருகையின்போது விழா நடைபெறும் இடங்களைச் […]

இந்தியா

சொகுசு ஹோட்டலில் 13 நாட்கள் தங்கி விட்டு வாடகை தராமல் தப்பியோட முயன்ற பெண்ணொருவர் கைது!

  • January 18, 2024
  • 0 Comments

டெல்லியில் சொகுசு ஹோட்டலில் 13 நாள் தங்கிவிட்டு பணம் தராமல் தப்பி ஓட முயன்ற ஆந்திர பெண்ணை பொலிஸார் கைது செய்தனர். ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர் ஜான்சிராணி சாமுவேல் (37). இவர், டெல்லி விமான நிலையம் அருகே ஏரோசிட்டியில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் 15 நாட்களாக தங்கியிருந்துள்ளார். ஆனால், அதற்கான வாடகையை செலுத்தாததால், இதுகுறித்து ஹோட்டல் ஊழியர்கள் கேட்டுள்ளனர். அப்போது, ஜான்சிராணி அவர்களைக் தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றார். இருப்பினும், அவரை ஹோட்டல் ஊழியர்கள் மடக்கிப் […]

ஐரோப்பா

மீண்டும் அணு ஆயுதப் பேச்சுவார்த்தையை தொடங்கும் அமெரிக்கா: நிராகரித்த ரஷ்யா

ரஷ்யாவின் உயர்மட்ட இராஜதந்திரி, அணு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை நிராகரித்துள்ளார், வாஷிங்டன் உக்ரேனுக்கு இராணுவ ஆதரவை வழங்கும் போது அது சாத்தியமற்றது என்று கூறியுள்ளார். உக்ரேனை ரஷ்ய பிரதேசத்தில் தாக்குதல்களை அதிகரிக்க ஊக்குவிப்பதன் மூலம் மேற்குலகம் உலக பாதுகாப்பு அபாயங்களை எரியூட்டி வருவதாக மாநாட்டில் பேசிய Sergey Lavrov குற்றம் சாட்டினார் மேலும் Kyiv க்கு மேற்கத்திய ஆதரவைப் பொருட்படுத்தாமல் மாஸ்கோ மோதலில் அதன் இலக்குகளை அடையும் என்றும் எச்சரித்தார் […]

இலங்கை

அஸ்வெசும திட்டம் தொடர்பில் வெளியான தகவல் : புதிதாக இணைத்துக்கொள்ளப்படவுள்ள 03 இலட்சம் பேர்!

  • January 18, 2024
  • 0 Comments

7 இலட்சம் நிவாரண மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்த பின்னர், மேலும் 03 இலட்சம் குடும்பங்கள் புதிதாக நிவாரணத்தை பெற தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 5000 குடும்பங்கள்  தகுதியற்றவை என  பணவியல், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அஸ்வசும நலன்புரி திட்டம் தொடர்பாக  640,000 ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளை பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக மூன்று இலட்சம் குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக   பதில் நிதியமைச்சர்  ஷெஹான் சேமசிங்க அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார். நிதியமைச்சில் இன்று […]

இலங்கை

உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தற்போது உகண்டாவின் கம்பாலா நகரை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உகண்டா குடியரசு ஜனாதிபதி யொவேரி முசேவெனியின் (Yoweri Museveni) அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அணிசேரா நாடுகளின் மாநாட்டின் (NAM) 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு, “உலளாவிய கூட்டு செழுமைக்கான ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்தல்” என்ற தலைப்பில் ஜனவரி 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் உகண்டாவின் கம்பாலா நகரில் நடைபெறவுள்ளது. […]