ஐரோப்பா

ஐரோப்பாவில் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றிய தடுப்பூசி

  • January 19, 2024
  • 0 Comments

ஐரோப்பாவில் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்புமருந்து குறைந்தது 1.4 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றியிருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் உடல்நலக் குறைவால் ஐரோப்பிய மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் COVID-19, Influenza தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது மிக முக்கியம் என்று நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பாவில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நோய்ப்பரவலால் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சில ஐரோப்பிய நாடுகளில் COVID-19 பரவல் மீண்டும் தலைதூக்குகிறது. ஒரே நேரத்தில் மற்ற சுவாச நோய்களும் […]

இலங்கை

இலங்கையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் மரணமடைந்ததால் ஏற்பட்ட பதற்றம்

  • January 19, 2024
  • 0 Comments

நாரம்மல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சாரதி ஒருவர் உயிரிழந்ததையடுத்து, நேற்று இரவு ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போது முற்றாக நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சம்பவம் ரன்முத்துகல, நாரம்மல பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீதியில் பயணித்த  சிறிய ரக லொறியை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் சமிக்ஞை செய்த போதிலும், பொலிஸ் உத்தரவை மீறி அது இயங்கிக்கொண்டிருந்தது. நாரம்மல பொலிஸார் லொறியை துரத்திச் சென்று தடுத்து நிறுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், குறித்த சாரதியை சோதனையிட்ட போது, […]

இலங்கை

இலங்கையில் அதிக வரிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் : IMF பிரதிநிதிகளுடன் சஜித் கலந்துரையாடல்!

  • January 19, 2024
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இது தொடர்பான சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்  பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளை எனக்கூறி தற்போதைய அரசாங்கம் VAT உட்பட பல வகை வரிகளை மக்களுக்கு அதிக வரிச்சுமையை கொடுத்து அதீதமாக அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் பொது மக்கள், […]

உலகம்

புளோரிடாவில் விசாரணைக்காக சென்ற 03 பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம்!

  • January 19, 2024
  • 0 Comments

புளோரிடாவில் விசாரணைக்காக சென்ற 03 பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து மூன்று அதிகாரிகளும் நேற்று (18.01) மியாமியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மியாமி-டேட் காவல் துறையின் கூற்றுப்படி ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. W 162வது அவென்யூவின் 22000 பிளாக்கில் உள்ள ஒரு வீட்டி நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதை அவதானித்த நிலையில், உடனடியாக அங்கு சென்றுள்ளனர். போலீசார் முன் கதவை நெருங்கியதும், அந்த […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பத்துடன் அறிமுகமானது Samsung Galaxy S24..!

  • January 19, 2024
  • 0 Comments

சாம்சங் நிறுவனத்தின் Galaxy S சீரியஸின் அடுத்த மாடலான சாம்சங் கேலக்ஸி S24, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ள இந்த சாதனத்தின் முழு விவரங்கள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸில், Galaxy S24, S24 Plus, S24 Ultra என்ற மூன்று மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6.8 இன்ச் Amoled 2x டிஸ்ப்ளேக்களைக் கொண்ட இந்த […]

இந்தியா

இந்தியாவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்து : 14 பேர் பலி!

  • January 19, 2024
  • 0 Comments

மேற்கு இந்தியாவில் படகு விபத்தில் 12 பள்ளி மாணவர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குஜராத் மாநிலம் வடடோராவில் உள்ள ஹார்னி ஏரிக்கு ஆய்வுப் பயணமாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு  விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் 12 குழந்தைகளும் இரண்டு ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதுடன், விபத்தின் போது படகில் சுமார் 31 பேர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.   மேலும் 07 பேர் உயிர் தப்பியுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

உலகம்

அமெரிக்காவின் டேங்கர் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹுதிகள்!

  • January 19, 2024
  • 0 Comments

செங்கடலில் உள்ள அமெரிக்காவுக்குச் சொந்தமான டேங்கர் கப்பலில் ஈரான் ஆதரவு ஹவுத்தி போராளிகள் இரண்டு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர். குறித்த ஏவுகணைகள் தண்ணீரில் விழுந்தமையால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தாக்குதல் நடந்த நேரம் குறித்த கூடுதல் விவரங்களை ஹவுத்திகள் தெரிவிக்கவில்லை. சமீபகாலமாக ஹுதிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் செங்கடல் பகுதியில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

பிரான்ஸில் நபருக்கு கிடைத்த அதிஷ்டம் – அதிஷ்ட்டலாபச் சீட்டில் 88 மில்லியன் யூரோக்கள்

  • January 19, 2024
  • 0 Comments

பிரான்சைச் சேர்ந்த நபர் ஒருவர் EuroMillions அதிஷ்ட்டலாபச் சீட்டில் 88 மில்லியன் யூரோக்கள் வெற்றி பெற்றுள்ளார். 16 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை இந்த வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். 10-18-21-33-45 ஆகிய இலக்கங்களும் 8-12 ஆகிய அதிஷ்ட்ட இலக்கத்தையும் கொண்ட சீட்டுக்குரியவரே வெற்றிபெற்றவராவார். அவரது வெற்றிப்பணத்தை பெற்றுக்கொள்ள 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சென்ற 2023 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சீட்டிழுப்பு ஒன்றில் ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் €240 மில்லியன் யூரோக்கள்  வெற்றியீட்டிருந்தார். EuroMillions வரலாற்றில் வெல்லப்பட்ட அதிகபட்ச […]

இலங்கை

இலங்கை வானிலையில் பிற்பகல் வேளையில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • January 19, 2024
  • 0 Comments

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (19.01) அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் மி.மீ. அதிகபட்சமாக 75க்கு மேல் பலத்த மழை பெய்யும். மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை […]

இலங்கை

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரம்

  • January 19, 2024
  • 0 Comments

ஒக்டோபர் மாதத்திற்குள் சாரதி அனுமதிப்பத்திர பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் தற்போது நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைவாக தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் ஒருநாள் சேவையின் ஊடாக வழங்கப்படும் எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் அனைத்து மாவட்ட அலுவலகங்களும் இவ்வருட இறுதிக்குள் […]