யாழில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : 08 முறை கருச்சிதைவு அடைந்த தாய்க்கு பிறந்த குழந்தை!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எட்டுத்தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஒருவர் ஒன்பதாவது முறை ஆரோக்கியமான குழந்தையை நேற்று (01.01) பிரசவித்துள்ளார். 24 வயதான மேற்படி தாயார் திருமணம் முடித்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக எட்டுத்தடவை கருச்சிதைவு ஏற்ப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். அதன் பின்னர் இந்த தாயார் கரப்பத்திற்க்கு முன்னரும் கர்ப்ப காலத்திலும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று புது வருடதினத்தில் ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்தார். மகப்பேற்று […]













