இலங்கை

வவுனியாவில் போதைப்பொருளுடன் காதல் ஜோடி கைது!

  • January 3, 2024
  • 0 Comments

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடி ஒன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை செய்த போது, அங்கு தங்கி இருந்த காதல் ஜோடியிடம் கஞ்சா மற்றும் தொலைபேசியினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப் பொருளும் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன், அதனை […]

ஐரோப்பா

தனது சொந்த கிராமத்திலேயே வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்திய ரஷ்யா!

  • January 3, 2024
  • 0 Comments

ரஷ்யா தற்செயலாக உக்ரைன் அருகே உள்ள தனது சொந்த கிராமம் ஒன்றில் வெடிகுண்டு வீசியதை அதன் ராணுவம் உறுதி செய்தது. தெற்கு வோரோனேஜ் பகுதியில் உள்ள ஒரு கிராமத்திலேயே குறித்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனவரி 2, 2024 அன்று, மாஸ்கோ நேரப்படி காலை 9 மணியளவில் (GMT), இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும்  ஆறு தனியார் வீடுகள் சேதமடைந்துள்ளதாகாவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி […]

பொழுதுபோக்கு

குடும்பத்துடன் இரவில் ஜாலியாக படகு சவாரி சென்ற அஜித்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

  • January 3, 2024
  • 0 Comments

நடிகர் அஜித் துபாயில் குடும்பத்துடன் ஜாலியாக நேரம் செலவழித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதல் கட்டப் படப்பிடிப்பைத் தொடர்ந்து தற்போதைய அடுத்தக் கட்டப் படப்பிடிப்பும் அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இதில் அஜித் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. படப்பிடிப்பில் சிறிது பிரேக் கிடைத்தாலும் அந்த நாட்களை துபாயில் கழித்து வருகிறார் […]

உலகம்

அர்ஜென்டினாவின் லா ரியோஜா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • January 3, 2024
  • 0 Comments

அர்ஜென்டினாவின் லா ரியோஜா பகுதியில் இன்று (03.01) 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 127 கிமீ (78.91 மைல்) ஆழத்தில் இருந்ததாக EMSC தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் மதிப்பிடப்படவில்லை.

பொழுதுபோக்கு

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு மனநல பரிசோதனை… உயர்நீதிமன்றத்தில் பரபர மனு

  • January 3, 2024
  • 0 Comments

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பரபரப்பான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி திரைப்படங்களை எடுத்தார். அதன்பிறகு நடிகர் விஜயுடன் மாஸ்டர், கமல்ஹாசனுடன் விக்ரம், மீண்டும் விஜயுடன் லியோ உள்ளிட்ட படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார். இந்நிலையில் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு […]

உலகம்

அமெரிக்காவில் விமானத்தின் இன்ஜினுக்குள் இருந்து நபரின் சடலம் மீட்பு!

  • January 3, 2024
  • 0 Comments

அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் கடந்த திங்கள்கிழமை இரவு சால்ட் லேக் சிட்டி சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தின் இன்ஜினுக்குள் உயிரிழந்து கிடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. பார்க் சிட்டியைச் சேர்ந்த கைலர் எஃபிங்கர், பயணிகளை ஏற்றிச் சென்ற வணிக விமானத்தின் இறக்கையில் பொருத்தப்பட்டிருந்த என்ஜினுக்குள் இறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எஃபிங்கர் அவசரகால வெளியேறும் கதவை உடைத்து, டார்மாக்கில் நடந்து சென்று என்ஜினுக்குள் ஏறியிருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். அவரது மரணத்திற்கான காரணம் தெளிவாக […]

ஆஸ்திரேலியா

ஜப்பானுக்கு உதவ முன்வந்துள்ள ஆஸ்திரேலியா!

  • January 3, 2024
  • 0 Comments

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானமும், ஜப்பான் கடலோர காவல்படை விமானமும் மோதிக்கொண்டதைத் தொடர்ந்து, ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 12 ஆஸ்திரேலியர்கள் பத்திரமாக இருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெளிவுபடுத்தினார். இது தொடர்பில் X பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த நெருக்கடியில் ஜப்பானுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க கான்பெர்ரா தயாராக இருப்பதாக கூறியுள்ளார். “ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் 12 ஆஸ்திரேலியர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்” […]

இலங்கை

இலங்கையில் எந்தவொரு மின்சார சபை ஊழியரையும் பணியிடை நீக்கம் செய்ய பணிப்புரை!

  • January 3, 2024
  • 0 Comments

சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது மின்சார சபையின் நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை மீறி செயற்படும் எந்தவொரு ஊழியரையும் பணி இடைநீக்கம் செய்து உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான பிரேரணை திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மின் கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை அடுத்த வாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் […]

பொழுதுபோக்கு

13 இலட்சமாக உயர்ந்த தொகை.. பெட்டியுடன் வெளியேறியது யார் தெரியுமா?

  • January 3, 2024
  • 0 Comments

இந்த சீசனில் விசித்ரா டைட்டில் வின் பண்ணுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் தான் ஒரு சைக்காலஜிஸ்ட் என்பதை நிரூபித்து விட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று இரவு பணப்பெட்டியுடன் விசித்ரா வெளியேறி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. பிரதீப் ஆண்டனி மற்றும் சுரேஷ் தாத்தா இதுபற்றி தங்கள் கருத்தை பதிவிட்டு வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நேற்று இரவு 13 லட்சம் பணப்பெட்டி வந்ததாகவும் அதை பார்த்த பலருக்கும் […]

இலங்கை

இலங்கையில் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் குடும்பத்தினருக்கு நிதியுதவி!

  • January 3, 2024
  • 0 Comments

பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ், சுற்றிவளைப்புக்காக சென்ற  உப பொலிஸ் பரிசோதகர் உபுல் சமிந்த குமார சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவருடைய குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி 2.5 மில்லியன் ரூபாவை வழங்கியதுடன், பொது பாதுகாப்பு அமைச்சர்  திரான் அலஸ் அவர்களினால் உபுல் சமிந்தவின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொகை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ் திணைக்களத்தின் சார்பில்  உபுல் சமிந்தவின் சேவைக்காக 1.75 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், அத்தொகை பதில் பொலிஸ் மா அதிபர்  தேஸ்பந்து தென்னகோனினால் அவரது குடும்பத்தினருக்கு […]