இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்லவை இரகசிய பொலிஸார் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் – நிலந்த ஜயதிஸ்ஸ!

  • January 3, 2024
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் முன்னாள் சுகாதார செயலாளர் வழங்கிய அறிக்கையின் பிரகாரம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவையும் இரகசிய பொலிஸார் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென தேசிய மக்கள் படையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட ரம்புக்வெல்ல அமைச்சருக்கு நெருக்கமான வைத்தியர் ஒருவர் சுகாதார ஊழியர்களுடன் இணைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, அவரை உடனடியாக இலங்கைக்கு அழைத்து […]

இலங்கை

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு

  • January 3, 2024
  • 0 Comments

ஜனாதிபதி வருகையினை முன்னிட்டு வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் சங்க தலைவர் றொகான் ராஜ்குமார் தெரிவித்தார்.முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (03.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,ஜனாதிபதி வருகையினை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள புகையிரத கடவை காப்பாளர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளார்கள். இதனால் புகையிரத கடவைகளில் பயணிக்கும் மக்கள் அவதானமாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.04.01.2024 ஆம் […]

விளையாட்டு

இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய தலைவர் தெரிவு

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டதாக இலங்கை தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (3) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உபுல் தரங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தலைவர் குசல் மெண்டிஸ், டெஸ்ட் அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்கும் தலைவர் மற்றும் உப தலைவராக செயல்படுவார் என்றும் உபுல் தரங்க தெரிவித்துள்ளர். தில்ருவான் பெரேரா, […]

இலங்கை

வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் பலி!

  • January 3, 2024
  • 0 Comments

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தநபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் அவருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் நேற்றைய தினம் உயிரிழந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. அனுராதபுரம் பதவியா பிரதேசத்தை சேர்ந்த 55 நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

பொழுதுபோக்கு

திடீரென லைட் ஆஃப்.. அலறிய ரம்பா… கடைசியில் பார்த்தா ரஜினிகாந்த்

  • January 3, 2024
  • 0 Comments

நடிகை ரம்பா அருணாச்சலம் படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் ரஜினிகாந்த் எப்படியெல்லாம் விளையாடியிருக்கிறார் என்பதை சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சுந்தர். சி இயக்கத்தில் ரஜினிகாந்த், செளந்தர்யா நடித்த அருணாச்சலம் படத்தில் விசுவின் மகளாகவும் செகண்ட் ஹீரோயினாகவும் ரம்பா நடித்திருப்பார். ஆனால், அந்த படத்துக்கு பிறகு ரஜினிகாந்தின் எந்தவொரு படத்திலும் ரம்பா நடித்திருக்க மாட்டார். அதற்கு காரணம் அந்த படத்தில் அவருக்கு நேர்ந்த சில இன்னல்கள் தான் என்று சில தகவல்களை கிளப்பி விட்டுள்ளனர். […]

ஐரோப்பா

பின்லாந்து மற்றும் ஸ்வீடனில் மிகவும் குளிரான வெப்பநிலை பதிவு

பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் நார்வேயில் மிகவும் குளிரான காலநிலை பதிவாகியுள்ளது. பனி காரணமாக ரயில் போக்குவரத்து மற்றும் படகு பாதைகள் நிறுத்தப்பட்டன. செவ்வாய்க்கிழமையன்று பின்லாந்து மற்றும் ஸ்வீடனில் உள்ள தெர்மோமீட்டர்கள் சில இடங்களில் -40 டிகிரி செல்சியஸுக்குக் கீழே சரிந்தன, ஏனெனில் இரண்டு ஸ்காண்டிநேவிய நாடுகளும் இந்த குளிர்காலத்தில் இதுவரை குளிரான வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளன. “இந்தக் குளிர்காலத்தில் இதுவரை நாம் கொண்டிருந்த மிகக் குளிரான வெப்பநிலை இதுவாகும், மேலும் இது வடக்கில் தொடர்ந்து குளிர்ச்சியாக இருக்கும்” […]

இலங்கை

கிளிநொச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு!

  • January 3, 2024
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு மாதமாகப் பாதிக்கப்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் 13,897 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதுடன் 4461 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி விவசாய அமைப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கிளிநொச்சி மானாமடு நீர்த்தேக்கம் வடிந்தமையினால் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவிற்குள் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அந்தப் பகுதியில் அதிகளவு நெற்செய்கைகள் அழிவடைந்துள்ளதாகவும்,  3000 ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கைகள் காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி இராமநாதபுரம், அக்கராயன்குளம், முழங்காவில், கண்டாவளை, பரந்தன், பூநகரி, புளியன்பொக்கனே, உரத்திபுரம், பளை போன்ற […]

ஆசியா

ஹமாஸின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் பலி : எந்தச் சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பகிரங்க அறிவிப்பு

ஹமாஸின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான சலே அல்-அரூரி பெய்ரூட்டில் இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இது ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் மற்றும் லெபனான் போராளிக் குழுவான ஹிஷ்புல்லாவுடன் மோதல் நிலையை தீவிரப்பப்படுத்தியுள்ளது. பெய்ரூட்டில் நடந்த தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலிய இராணுவம் “எந்தச் சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதாக” கூறியுள்ளது. இந்தப் படுகொலையானது காசாவில் போர் ஒரு பரந்த பிராந்திய மோதலாக கொதித்துவிடக்கூடும் என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது என்று ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ள உயர்மட்ட […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இறந்த கணவரின் விந்தணுவை சட்டப் போராட்டம் நடத்தி மீட்ட 62 வயது மனைவி

  • January 3, 2024
  • 0 Comments

இறந்த கணவரின் விந்தணுவை சட்டப் போராட்டம் நடத்தி பெற்றிருக்கிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 62 வயது பெண்மணி. 2 வாரிசுகள் மற்றும் கணவரை இழந்த துயரத்தில் அவர் மேற்கொள்ளும் சட்ட மற்றும் மருத்துவப் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் குடிமக்கள் தனியுரிமை மற்றும் சட்ட அடிப்படையிலான காரணங்களுக்காக 62 வயது பெண்மணியின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் பொதுவில் வெளியாகவில்லை. ஆனால், அதிகம் அறியப்படாத முன்மாதிரி சம்பவம் என்பதால், ஊடகங்களில் இது குறித்தான தகவல்கள் வெளியிடப்பட்டு […]

இலங்கை

யாழ் மாவட்டத்தில் பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் அதிருப்பதி வெளியிட்டுள்ளார் அமைச்சர் டக்ளஸ்!

  • January 3, 2024
  • 0 Comments

யாழ். மாவட்டத்தில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு திடமான தீர்மானதினை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவை பற்றிய நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல இரத்நாயக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன. சூம் காணொளி ஊடாக இன்று(03.01.நடைபெற்ற இக்கலந்துரையாடலில், […]