உலகம்

ஈரான் குண்டுவெடிப்பு அதிர்ச்சியளிக்கிறது: புடின் இரங்கல்

ஈரானில் கொல்லப்பட்ட ஜெனரல் காசிம் சுலைமானியின் கல்லறை அருகே குறைந்தது 103 பேர் கொல்லப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். “கல்லறைக்கு வருகை தரும் அமைதியான மக்கள் கொல்லப்படுவது அதன் கொடுமை மற்றும் சஅதிர்ச்சியளிக்கிறது” என்று புடின் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

ஆசியா

சீனாவின் ஐஸ் சிட்டியை பார்வையிட திரண்ட சுற்றுலா பயணிகள்!

  • January 4, 2024
  • 0 Comments

வடகிழக்கு சீனாவின் ஹீலாங்ஜியாங் மாகாணத்தின் பனிமூட்டம் நிறைந்த தலைநகரான ஹார்பினின் “ஐஸ் சிட்டி” புத்தாண்டு விடுமுறையில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்த்தது. உயரமான பனி கட்டமைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுடன், பனி சிற்பங்களும், வர்ண விளக்குகளும் மக்களை உற்சாகப்படுத்தியுள்ளது. திங்களன்று முடிவடைந்த மூன்று நாள் புத்தாண்டு விடுமுறையின் போது இந்த ஆண்டு திருவிழா ஹார்பினுக்கு 3.05 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்க உதவியது, இது சுற்றுலா வருவாயில் 5.91 பில்லியன் யுவான் ($826 மில்லியன்) ஈட்டியது என்று மாநில […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி யாழிற்கு விஜயம்: மக்கள் எதிரப்பு போராட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக யாழ். பழைய பூங்கா அருகில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதுதான் வீதித் தடைகளை அமைத்து போராட்டகாரர்களை தடுத்து வைத்துள்ளனர். அத்துடன் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூவரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர் என தெரிவிக்கபப்டுகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்துக்கு வெளியே நீர்த்தாரை பிரயோகிக்கும் இயந்திரம், கலகமடக்கும் படை, பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று (04) […]

உலகம்

அமெரிக்க நீதிமன்றத்தில் பெண் நீதிபதி மீது தாக்குதல்!

  • January 4, 2024
  • 0 Comments

அமெரிக்க நீதிமன்றத்தில் பெண் நீதிபதியை சந்தேக நபர் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார். இது தொடர்பான சம்பவம் அமெரிக்காவின் நெவாடா நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது. அங்கு நீதிபதி தங்கியிருந்த இடத்தினுள் புகுந்த சந்தேக நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். அப்போது, ​​நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவலர்கள் அவரைக் கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

பொழுதுபோக்கு

விஜய் மீது காலணி வீச்சு… காவல் நிலையத்தில் புகார்

  • January 4, 2024
  • 0 Comments

நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த நடிகர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த விஜய் சென்றார். #NewsUpdate | கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் மீது காலனி வீசிய சம்பவம் தொடர்பாக தென் சென்னை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் நடவடிக்கை […]

ஆசியா

ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதல் : மூவர் காயம்!

  • January 4, 2024
  • 0 Comments

ஜப்பானில் ரயிலில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அக்கிஹபர நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று (03.01) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது.

ஆசியா

தீவிரமடையும் இஸ்ரேல் காசா போர்: ஜோ பைடனுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஜோ பைடனின் மறுதேர்தல் பிரச்சார ஊழியர்கள் பிரச்சினையில் வாக்காளர்களை இழக்க நேரிடும் என்று ஒரு அநாமதேய கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தாரிக் ஹபாஷ், கல்விச் செயலர் மிகுவல் கார்டோனாவுக்கு எழுதிய கடிதத்தில் இந்த நிர்வாகம் அப்பாவி பாலஸ்தீனியர்களின் உயிர்களுக்கு இழைக்கப்படும் அட்டூழியங்களைக் கண்டும் காணாதது போல் அமைதியாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் அநாமதேய ஜோ பைடனின் மறுதேர்தல் பிரச்சார ஊழியர்கள், ஊடகங்களில் வெளியிடப்பட்ட தங்கள் கடிதத்தில், காஸாவில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்குமாறு பைடனை வலியுறுத்தியுள்ளனர். […]

இலங்கை

இலங்கை முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு தடுப்பு வாரத்தை பிரகடனப்படுத்த நடவடிக்கை!

  • January 4, 2024
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் விசேட டெங்கு தடுப்பு வாரத்தை பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போதுள்ள டெங்கு அபாயத்தை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால தலைமையில் சுகாதார அமைச்சில் ஆரம்பமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், பொலிஸ் மற்றும் முப்படைகளின் தலைவர்கள், டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட மட்டத்தில் இன்று (04.01) முதல் டெங்கு […]

இலங்கை

இந்த வருடத்திலிருந்து மருத்துவ கொடுப்பனவுகளை 100% ஆக உயர்வு : ஜனாதிபதி நிதியம்

ஜனாதிபதி நிதியம் இந்த ஆண்டு முதல் மருத்துவ கொடுப்பனவுகளை 100% ஆக உயர்த்தியுள்ளது, இது முன்னர் கண்டறியப்பட்ட நோய்களுக்கான பாதுகாப்பை விரிவுபடுத்தியுள்ளது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. “மருத்துவ உதவிக்கான மாத வருமான வரம்பு ரூபாய் 200,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இது நிதி உள்ளடக்கம் மற்றும் பரந்த சுகாதார அணுகலை ஊக்குவிக்கிறது, இது பொதுமக்களுக்கான சுகாதார ஆதரவை மேம்படுத்துவதற்கான நிதியின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. அத்துடன் 2024ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைய ஜனாதிபதி […]

பொழுதுபோக்கு

தினமும் புதுப்புது லுக்கில் விஜய்… மாஸ் போஸ்டர்களை இறக்கும் GOAT… இப்போ என்ன தெரியுமா???

  • January 4, 2024
  • 0 Comments

‘தளபதி 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டிசம்பர் 31ம் தேதி வெளியாகி வைரலாகியிருந்தது. ‘The Greatest Of All Time’ என்ற வரிகளுடன் வெளியாகியிருந்த இதில் இளம் வயது விஜய்யும், நடுத்தர வயதில் இருக்கும் விஜய்யும் மிஷனை முடித்துவிட்டு பாராசூட்டில் இறங்கி வருவதைப் போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதன் மூலம் இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பது உறுதியாகியிருந்தது. மேலும், ‘Light can Devour the Darkness but Darkness cannot consume the Light’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது […]