இலங்கை அரசியல்வாதிகள் பின்னால் சுற்றி திரியும் அரச புலனாய்வு அதிகாரிகள்
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைகிறார்களா என்பதை ஆராய்வதற்காக அரச புலனாய்வு அதிகாரிகள் இந்த நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர்களை பின்தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அமைச்சர்கள் குழுவொன்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைவதற்கு எடுத்த தீர்மானங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது. அவர்களில் யார் இணைகிறார்கள் என்பது குறித்து ஆராய்வதற்காக அவ்வப்போது புலனாய்வு அதிகாரிகள் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை பின்தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. […]












