இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கை அரசியல்வாதிகள் பின்னால் சுற்றி திரியும் அரச புலனாய்வு அதிகாரிகள்

  • January 8, 2024
  • 0 Comments

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைகிறார்களா என்பதை ஆராய்வதற்காக அரச புலனாய்வு அதிகாரிகள் இந்த நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர்களை பின்தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அமைச்சர்கள் குழுவொன்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைவதற்கு எடுத்த தீர்மானங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது. அவர்களில் யார் இணைகிறார்கள் என்பது குறித்து ஆராய்வதற்காக அவ்வப்போது புலனாய்வு அதிகாரிகள் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை பின்தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. […]

பொழுதுபோக்கு

தினமும் புதுப் புது சர்ப்ரைஸ்களை அள்ளி வீசும் வெங்கட் பிரபு…

  • January 8, 2024
  • 0 Comments

நடிகர் விஜய்யின் 68ஆவது படமான Greatest Of All Time திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விறுவிறுப்பான நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் முடிவடைந்துவிடும் என்று வலைபேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார் அதற்காக வெங்கட் பிரபு தற்போது இலங்கை சென்றுள்ளார். ஜனவரி இரண்டாம் வராத்தில் விஜய் இலங்கை செல்வார் என்றும் கூறப்படுகின்றது. https://twitter.com/VP_0ffl/status/1743995006363607146 இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியானதை அடுத்து, […]

வாழ்வியல்

அளவிற்கு அதிகமானால்… விஷமாகும் தண்ணீர்

  • January 8, 2024
  • 0 Comments

உடலை ஆரோக்கியமாகவும், உள்ளேயும் வெளியேயும் வலுவாகவும் வைத்துக் கொள்ள, சரியான அளவு தண்ணீர் குடிப்பதும், நீரேற்றத்துடன் இருப்பதும் அவசியம். அதனால்தான், கோடை காலத்தில் மட்டுமல்லாது, மழை மற்றும் குளிர் காலங்களிலும் நிறைய தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் அளவிற்கு அதிக தண்ணீர் குடிப்பதால் நீங்கள் நோய்வாய்ப்படக் கூடும். ஆம், அதிகமாக தண்ணீர் குடிப்பதால் வாட்டர் பாய்சனிங் அல்லது வாட்டர் டாக்ஸிசிட்டி எனப்படும் நோயை உண்டாக்கும். ஒரு நபர் ஒரு குறுகிய காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்கும் போது, […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட விபரீதம் – 8 பேர் கவலைக்கிடம்

  • January 8, 2024
  • 0 Comments

மெல்போர்ன் இசை நிகழ்ச்சி ஒன்றில் போதைப்பொருள் உட்கொண்ட 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 7 பேர் சுயநினைவின்றி சுவாச ஆதரவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் அளவுக்கதிகமாக அல்லது விஷம் கலந்ததே விபத்துக்குக் காரணம் என நம்பப்படுகிறது. சம்பவம் தொடர்பில் விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஐரோப்பா

உலகிலேயே அதிக மொழிகள் பேசும் மக்கள் கொண்ட பிரித்தானிய நகரம்

  • January 8, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் பொதுவாக பல மொழிகளின் பற்றாக்குறையால் அறியப்பட்டாலும், அது உலகின் மிகவும் பன்மொழி நகரமாக உள்ளதென புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. மான்செஸ்டரில் எந்த நேரத்திலும் 200 மொழிகள் வரை பேசப்படுவதாக பன்மொழி மான்செஸ்டர் திட்டத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நகரத்தின் மக்கள்தொகை சுமார் 553,000 ஆகும், இது நகரத்தை மிகவும் மொழியியல் ரீதியாக அடர்த்தியாக மாற்றுகிறது. இந்த ஆயவின் மூலம் நகரத்தின் வயது வந்தோரில் பாதி பேர் பன்மொழி பேசுபவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், 10 இளைஞர்களில் நான்கு […]

ஐரோப்பா

பிரான்ஸில் பல்லாயிரம் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

  • January 8, 2024
  • 0 Comments

பிரான்ஸில் அண்மைக்காலமாக குழந்தைகள் அதிகம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. குறித்த குழந்தைகள் அவசரப் பிரிவிலேயே அனுமதிக்க படுவதாக சுகாதாரம் அமைச்சு அறிவித்துள்ளது. வேறுபாடுகள் இன்றி சுமார் 39 000 மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஆண்டொன்றுக்கு அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரங்கள், புறநகரங்கள் எனும் வேறுபாடு இன்றி சுவாசக் காற்று எங்கும் மாசுபட்டுள்ளமையே இதற்கு காரணமாகும். சுமார் 11,000 மூன்று வயது குழந்தைகள் ஆஸ்துமாவுக்காகவும், 28,000 குழந்தைகள் மூச்சுக்குழாய் அழற்சிக்காகவும் அவசரமாக அனுமதிக்கப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

இலங்கை

இலங்கை அரசியலில் மீண்டும் சந்திரிக்கா

  • January 8, 2024
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கமைய, அவர் நாடு திரும்புவது அநேகமாக அடுத்த வாரம் நடைபெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மறைந்த பண்டாரநாயக்கவின் நினைவேந்தல் நிகழ்விலும் அவர் பங்கேற்க உள்ளார். நினைவேந்தல் நிகழ்வின் பின்னர், ஸ்ரீலங்கா தேசியக் கட்சியின் நிறைவேற்றுச் சபையும் கூடும் எனவும் என தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, சந்திரிக்கா பண்டாரநாயக்காவுக்கு நாடு திரும்பியதும் கட்சியில் […]

ஆசியா

திருமணம் செய்வதனை தவிர்க்கும் சீன இளைஞர் – யுவதிகள்! குறையும் மக்கள் தொகை

  • January 8, 2024
  • 0 Comments

சீன இளைஞர் யுவதிகளின் திருமணம் வெகுவாக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் சீனா வெளியிட்ட தரவுகளின்படி, சீனாவில் உள்ள 25 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர் சமூகத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 2023ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் மக்கள் தொகை அடிப்படையில் சீனா கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

30 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் – விண்டோஸ் கீ போர்டில் அதிரடி மாற்றம்

  • January 8, 2024
  • 0 Comments

30 ஆண்டுகளில் இல்லாத மாற்றமாக விண்டோஸ் கீபோர்டில் ஏஐ புரட்சியை களமிறக்குகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். 1994-ல் விண்டோஸ் உபயோகத்துக்கான ஸ்டார்ட் பட்டன் ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் கீ போர்டில் கடைசியாக புகுத்தியது. அதன் பின்னர் 30 ஆண்டுகள் இடைவெளியில், அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்துக்கு ஈடுகொடுக்கும் வகையிலான ஏஐ பட்டன் ஒன்றை, கீ போர்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. ஸ்பேஸ் பட்டனின் வலதுபுறம் இந்த ஏஐ பட்டன் இடம்பெற இருக்கிறது. இது சாட்பாட் உட்பட ஏஐ […]

மத்திய கிழக்கு வட அமெரிக்கா

அமெரிக்காவின் திடீர் முடிவால் கடும் சிரமத்தில் விமான பயணிகள்

  • January 8, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் பல முக்கிய விமான நிறுவனங்கள் போயிங் ரக விமானங்களை சேவையில் இருந்து அகற்றியதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை கலிபோர்னியாவில் இருந்து ஒன்டாரியோ நோக்கி பயணித்த விமானம் ஜன்னல் உடைந்ததால் 16,000 அடி உயரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த காரணத்திற்காக, பல முக்கிய அமெரிக்க விமான நிறுவனங்கள் போயிங் ரக விமானங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளன. எவ்வாறாயினும், அந்த விமானங்களின் பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்திய பின்னர் அவர்கள் சேவைக்குத் திரும்புவார்கள் […]