இலங்கை

யாழிற்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதிய குழுவினர்

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) குழுவினர் இன்று(14) யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளனர். இதன்போது வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உள்ளிட்ட பல தரப்பினருடனும் நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சந்திப்பில் ஈடுபடவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்தக் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்டது. அடுத்தகட்ட கடன் பெறுகைகள் தொடர்பில் தற்போது முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே இலங்கைக்கான பயணத்தின் ஒரு பகுதியாக நாணய […]

செய்தி

திருகோணமலையில் பட்டப்படிப்பை தொடர மாணவர்களுக்கு நிதியுதவி!

  • January 14, 2024
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகி பட்டப் படிப்பை தொடர பண வசதி இல்லாத தந்தையை இழந்த மாணவ, மாணவிகளுக்கு இன்று (14) நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தினால் மாவட்ட கிளை அலுவலகத்தில் 2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதத்துக்கான நிதியுதவி திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத் தலைவர் எஸ்.குகதாஸனினால் வழங்கி வைக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்திலுள்ள பதினொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 65 மாணவ, மாணவிகளுக்கு இந்நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது. […]

இலங்கை

இலங்கையின் முக்கிய குற்றவாளிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதாக தகவல்!

  • January 14, 2024
  • 0 Comments

இலங்கையில் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்காக பொலிஸார் விசேட நடவடிக்கையினை மேற்கொண்டுள்ள நிலையில், மிக முக்கிய குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த குற்றவாளிகள் துபாய் சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கடத்தல்காரர்கள் பணக்கார தொழிலதிபர்கள் போல் மாறுவேடமிட்டு இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, ருமேனியா போன்ற நாடுகளுக்கு தப்பிச் செல்வதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இதன்மூலம், எளிதாக விசா கிடைக்கும் நாடுகளும், வெளிநாட்டினர் அதிக ஆய்வுக்கு உட்படுத்தப்படாத நாடுகளும் தப்பிச் செல்ல தேர்வு […]

இலங்கை

இலங்கையில் வரலாறு காணாத அளவில் உயர்ந்த கேரட்டின் விலை : ஒரு கிலோ கேரட் 1100 ரூபாய்!

  • January 14, 2024
  • 0 Comments

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு கிலோ கேரட்டின் மொத்த விலை 1000 – 1100 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். நுவரெலியா பிரதேசத்தில் மரக்கறி விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ கேரட்டை மொத்தமாக 900 ரூபாவிற்கு கொள்வனவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். கேரட் மாத்திரம் அன்றி ஏனைய மரக்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக லீக்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் மொத்த விலையில் ரூ.450-500க்கும், பீன்ஸ், […]

இலங்கை

கிளிநொச்சியில் நீர்ப்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவர் சடலங்களாக மீட்பு!

  • January 14, 2024
  • 0 Comments

கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் உள்ள நீர்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.நேற்று இரவு இடம்பெற்ற விபத்தினால் அவர்கள் இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி குறியீடுகளை உடைத்து நீர்பாசன வாய்க்காலிற்குள் பாய்ந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தயாளன் தனுசன் மற்றும் அழகாபுரி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கிருஸ்ணன் சதீசன் ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். […]

இலங்கை

பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் 700இற்கும் மேற்பட்டோர் கைது!

  • January 14, 2024
  • 0 Comments

கடந்த 24 மணித்தியாலங்களில் ‘நீதி நடவடிக்கை’யுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 771 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது192 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ் மற்றும் 10,611 மாத்திரைகளும் அங்கு காணப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசியா

மலேசியாவில் தன் 112ஆவது வயதில் 8வது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் மூதாட்டி!

  • January 14, 2024
  • 0 Comments

112 வயதான சிட்டி ஹவா என்ற மூதாட்டி, தன்னுடைய 8 வது திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மலேசியாவின் தும்பட் (Tumpat) பகுதியில் வசித்து வருபவர் சிட்டி ஹவா (Siti Hawa) என்ற 112 வயது மூதாட்டி. சிட்டி ஹவா இதற்கு முன்னதாக 7 முறை திருமணம் செய்து கொண்டுள்ளார், அதில் சில கணவர்கள் உயிரிழந்து விட்டனர். மற்ற கணவர்கள் விவாகரத்து பெற்றுக் கொண்டுவிட்டனர். தற்போது 58 வயதாகும் அவரது இளைய மகனுடன் சிட்டி ஹவா […]

இலங்கை

கிழக்கு மாகாணத்தின் சேவைகளை பாராட்டிய IMF குழுவினர்!

  • January 14, 2024
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவினர் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர். கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாணம் குறுகிய காலத்தில் அடைந்து வரும் வளர்ச்சிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர். இக்கலந்துரையாடலில் பீட்டர் ப்ரூயர் (சிரேஸ்ட பணித் தலைவர்), சர்வத் ஜஹான் (IMF வதிவிடப் பிரதிநிதி), சோபியா ஜாங் (சிரேஸ்ட பொருளாதார நிபுணர்), ஹுய் மியாவ் (சிரேஸ்ட நிதித்துறை […]

உலகம்

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த திட்டமிடும் கனடா!

  • January 14, 2024
  • 0 Comments

கனடாவில் வசிக்க அனுமதிக்கப்படும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கனடா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர், வெளியிட்டுள்ள தகவலின்படி, கனடா வீட்டு வசதி நெருக்கடிக்கான விமர்சனங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா தனது பொருளாதாரத்தை இயக்குவதற்கும், வயதான மக்களை ஆதரிப்பதற்கும் குடியேற்றத்தை சார்ந்துள்ளது மற்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆண்டுதோறும் குடியேற்றத்தை அதிகரித்து வருகிறார். பணவீக்கம் கட்டுமானத்தை மெதுவாக்கியது போலவே, குடியேற்றவாசிகள் மற்றும் சர்வதேச மாணவர்களின் அதிகரிப்பு வீடுகளுக்கான தேவையை தூண்டுவதாகவும் தெரிவித்துள்ளது. […]

இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 12 பேர் கைது!

  • January 14, 2024
  • 0 Comments

நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் வடக்கடலில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 03 மீன்பிடி படகுகளில் இருந்த இந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மிலாடி மீன்பிடி பரிசோதகரிடம் […]