இலங்கை

வவுனியாவிலும் களைகட்டிய தைப்பொங்கல் கொண்டாட்டங்கள்!

  • January 14, 2024
  • 0 Comments

உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. நாளையதினம் உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற வாக்கிற்கிணங்க தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடவுள்ளனர். வவுனியா நகரப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன் பொங்கலுக்கு தேவையான பானை , அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது. தைப்பொங்கல் திருநாள் நாளையதினம் (15.01.2024) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள […]

ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற ஐந்து புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு

கால்வாயை கடக்க முயன்ற ஐந்து புலம்பெயர்ந்தோர் பிரெஞ்சு கடற்பகுதியில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சுமார் 70 பேர் ஒரு சிறிய படகில் ஏற முற்பட்டபோது அது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்று பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்த நால்வரும் ஈராக் மற்றும் சிரியாவை சேர்ந்தவர்கள் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 32 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து அருகிலுள்ள உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். வெளிவிவகார அமைச்சர் டேவிட் கேமரூன், இது “இதயத்தை உடைக்கிறது” […]

பொழுதுபோக்கு

கமல் – மாயா பற்றி மோசமான பேச்சு.. கண்கலங்கி மன்னிப்பு கேட்ட விஜய் பிரபலங்கள்…

  • January 14, 2024
  • 0 Comments

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை மாயா மற்றும் கமல்ஹாசன் குறித்தும் விஜய் டிவி பிரபலங்கள் புகழ் மற்றும் குரேஷி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இருவரும் தனித்தனியாக வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவருக்கும் மிகவும் பிடித்தமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். அந்த அக்டோபர் மாதம் 1ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலை 6 மணியளவில் கொண்டாட்டங்களுடன் தொடங்கும் பிக் […]

இந்தியா

மணிப்பூரில் தொடங்கிய ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை ..!

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் தொடங்கினார். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபெறும் இந்த யாத்திரை மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மணிப்பூரில் இருந்து மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். 15 மாநிலங்களில் 6,713 கி.மீ. தூரம் நடைபெறும் இந்த யாத்திரை 67 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தியுடன் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொள்கிறார்கள். […]

ஆசியா

தைவானுக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்கா : கண்டனம் வெளியிட்டுள்ள சீனா!

  • January 14, 2024
  • 0 Comments

தைவான் தேர்தல் குறித்த அமெரிக்காவின் அறிக்கைக்கு சீனா கடுமையாகக் கண்டனம் வெளியிட்டுள்ளது. பெய்ஜிங்கின் இராஜதந்திர அழுத்தம் மற்றும் சீன போர் விமானங்களின் தினசரி ஊடுருவல்களுக்கு மத்தியில் தைவான் தேர்தல் வெற்றிகரமாக இடம்பெற்றது. இந்த தேர்தலில் ஹூ யு-இஹ்வை 900,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து லாய் வெற்றிப்பெற்றார். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை லாயின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, “தங்கள் வலுவான ஜனநாயக அமைப்பு மற்றும் தேர்தல் செயல்முறையின் வலிமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்ததற்காக” தைவான் மக்களைப் பாராட்டியது. இதற்கு […]

ஐரோப்பா

போலந்திற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ரஷ்ய நபர் கைது

அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ரஷ்ய நபர், நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான உதவிக்கு ஈடாக, முக்கியமான தகவல்களை போலந்திற்கு அனுப்பத் திட்டமிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதற்காக கைது செய்யப்பட்டதாக Federal Security Service தெரிவித்துள்ளது. பிப்ரவரி 2022 இல் மாஸ்கோ உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து வெளிநாட்டு உளவுத்துறையில் பணிபுரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டினர் மற்றும் ரஷ்ய குடிமக்களை ரஷ்ய பாதுகாப்பு சேவைகள் தடுத்து வைத்துள்ளன. குறித்த சந்தேகநபர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் ஒரு கிரிமினல் வழக்கு […]

ஆசியா

கிழக்கு கடற்பகுதியில் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா!

  • January 14, 2024
  • 0 Comments

வடகொரியா தனது நாட்டின் கிழக்கு கடற்பகுதியில் பால்ஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர், எவ்வளவு தூரம் குறித்த ஏவுகணை சென்றது போன்ற விவரங்களை வெளியிடவில்லை. தென் கொரியாவுடனான பதட்டமான கடல் எல்லைக்கு அருகே வட கொரியா பீரங்கி குண்டுகளை சரமாரியாகச் சுட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. டிசம்பரின் பிற்பகுதியில் நடந்த ஒரு முக்கிய ஆளும் கட்சி […]

ஆசியா

போரை உலக நீதிமன்றம் உட்பட யாராலும் தடுக்க முடியாது : நெதன்யாகு எச்சரிக்கை

இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிரான போர் வெற்றி பெறும் வரை தொடரும் எனவும் உலக நீதிமன்றம் உட்பட யாராலும் தடுக்கப்பட மாட்டாது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது என்ற தென்னாப்பிரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்திய பின்னர் நெதன்யாகு இதனை தெரிவித்துள்ளார். உலக நீதிமன்றத்தின் முன் உள்ள வழக்கு பல ஆண்டுகளாக தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இடைக்கால நடவடிக்கைகள் குறித்த […]

இலங்கை

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் மோசடி: யாழில் ஒருவர் கைது

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் மோசடி செய்தவர் யாழ்ப்பாணத்தில கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட விசேட குற்றவிசாரணை பிரிவில் இத்தாலிக்கு செல்வதாக 23 லடசம் பணம் மோசடி செய்யப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் வசிக்கும் நபரொருவர் முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தார். முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ். மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலமையிலான குழு பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபரை நெல்லியடி பொலிஸ் பிரிவில் தலைமறைவாக இருந்தபொழுது கைது செய்துள்ளனர். கைது செய்யபட்டவர் சுன்னாகம் உடபட […]

இலங்கை

யாழில் களைக்கட்டிய தைத் திருநாள் கொண்டாட்டம்!

  • January 14, 2024
  • 0 Comments

தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பொங்கல் வியாபாரம் களைகட்ட தொடங்கியது. யாழின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில் மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்து வருவதை காணமுடிந்தது.