இலங்கை

இலங்கையில் வரலாறு காணாத அளவில் உயர்ந்த கேரட்டின் விலை : ஒரு கிலோ கேரட் 1100 ரூபாய்!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு கிலோ கேரட்டின் மொத்த விலை 1000 – 1100 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பிரதேசத்தில் மரக்கறி விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ கேரட்டை மொத்தமாக 900 ரூபாவிற்கு கொள்வனவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேரட் மாத்திரம் அன்றி ஏனைய மரக்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக

லீக்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் மொத்த விலையில் ரூ.450-500க்கும், பீன்ஸ், மீன், மிளகாய் மொத்த விலை ரூ.750-800க்கும் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.1600க்கும், முள்ளங்கி கிலோ ரூ.350க்கும் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுவரெலியா பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ கேரட் 350-400 ரூபாவிற்கும், சீன உணவகங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு கிலோ ப்ரோக்கோலி 750 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்