இலங்கை

இலங்கை மதுவரித்திணைக்களத்தின் அறிவிப்பு

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளைய தினத்தில் வடக்கு மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, நுவரெலியா மாவட்டத்திலும் பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை, ரிதிமாலியத்தை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளன. அத்துடன், வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினத்தில் மூடப்படவுள்ளன.

இலங்கை

களுகங்கையில் நீராடச் சென்ற மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

  • January 14, 2024
  • 0 Comments

களுத்துறை, களுகங்கையில் நீராடச் சென்ற 16 வயதுடைய இரு மாணவிகளும் 15 வயதுடைய மாணவன் ஒருவனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை, பன்வில மற்றும் தொடங்கொட பகுதிகளைச் சேர்ந்தவர்களே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீராடச் சென்ற மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், பின்னர் மீட்கப்பட்டு களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பா

உக்ரைன் போரை சீனா முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: சுவிட்சர்லாந்து வலியுறுத்தல்

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் சீனா ஈடுபட வேண்டும் என்று சுவிட்சர்லாந்தின் உயர்மட்ட தூதர் தெரிவித்துள்ளார். “சீனா ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகிக்கிறது. இதில் சீனாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுவரை ரஷ்யாவும் உக்ரைனும் விட்டுக்கொடுப்பு செய்ய தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆசியா

இந்திய ராணுவத்தினருக்கு கெடுவிதித்துள்ள மாலத்தீவு…

  • January 14, 2024
  • 0 Comments

இந்தியா தனது ராணவ வீரர்களை மாலத்தீவில் இருந்து திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, அதற்கு காலக்கெடுவும் விதித்து உத்தரவிட்டுள்ளார் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு. மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு தலைமையிலான ஆட்சியாளர்கள் சீனாவின் ஆதரவாளர்களாக உள்ளனர். இந்திய எதிர்ப்பு என்பதையும் தங்களது அரசியல் நோக்கமாகக் கொண்டு ஆட்சியை பிடித்தவர்கள். தற்போது அரசு அமைத்ததும் அதனை செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.இந்தியாவின் அண்டை தேசங்களை தனது தரப்புக்கு திருப்பி வரும் சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை வரிசையில் அடுத்ததாக மாலத்தீவுக்கும் […]

தமிழ்நாடு

தர்ம்புரியில் பீர் பாட்டிலில் மிதந்த பல்லி; குடிமகன்கள் அதிர்ச்சி!!

  • January 14, 2024
  • 0 Comments

பென்னாகரம் அடுத்து பாப்பாரப்பட்டி அரசு மதுபான கடையில் பீர் பாட்டிலில் பல்லி இருந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்து, கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மதுபான கடையில் இன்று மூன்று நண்பர்கள் 12 கிங்பிஷர் பீர் பாட்டில்களை வாங்கியுள்ளனர். இதனை எடுத்துச் சென்ற அவர்கள், பீர் பாட்டில்களை வாகனத்தில் வைக்கும் போது அதில் ஓரு பீர் பாட்டிலில் மட்டும் அளவு கம்மியாக இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பீர் […]

இலங்கை

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை வௌியிட்ட ஆசிரியருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான I மற்றும் II வினாத்தாள்கள் வௌியானது தொடர்பில் அம்பாறையில் உள்ள பிரபல அரச பாடசாலையின் உயர்தர விவசாய விஞ்ஞான ஆசிரியரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. 52 வயதுடைய சந்தேகத்திற்குரிய ஆசிரியர் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகளையும் நடத்தி வந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ஆசிரியர் விவசாய விஞ்ஞானம் I வினாத்தாள் கேள்விகளை ஜனவரி 8 ஆம் திகதியும், விவசாய விஞ்ஞானம் II […]

ஐரோப்பா

டென்மார்கின் மகாராணி மார்கரிட்டா இன்று ஓய்வு பெற்றார்!

  • January 14, 2024
  • 0 Comments

52 வருடங்களாக டென்மார்க்கை ஆட்சி செய்த இரண்டாம் மார்கரிட்டா மகாராணி இன்று (14) ஓய்வு பெற்றார். இன்று அவரது ஓய்வு மற்றும் அவரது மூத்த மகன் இளவரசர் ஃபிரடெரிக் நாட்டின் புதிய மன்னராக அரியணை ஏறுவதையும் குறிக்கிறது. இந்த அற்புதமான வரலாற்று நிகழ்வை காண தற்போது கோபன்ஹேகனில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் நாட்டு மக்கள் கூடியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராணி தனது 2024 புத்தாண்டு உரையின் போது தனது ராஜினாமாவை அறிவித்தார். 1972 […]

ஐரோப்பா

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் அமைதி சூத்திரத்தை முன்வைத்த உக்ரைன்

டாவோஸில் நடந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் உக்ரைன் அமைதி சூத்திரத்தை முன்வைத்துள்ளது. வாரத்தின் பிற்பகுதியில் டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உரையாற்றத் திட்டமிடப்பட்டுள்ள்ளார். உக்ரைன் ஜனாதிபதி ஒரு 10-புள்ளி சமாதான சூத்திரத்தை முன்வைத்தார் என தெரிவிக்கப்பட்டுளள்து.

ஐரோப்பா

ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுக்க ஹமாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்!

  • January 14, 2024
  • 0 Comments

மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு ஹமாஸ் செயல்பட்டு வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Mossad, (இஸ்ரேல் பாதுகாப்பு நிறுவனம்)  மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF) கூறுகையில், ஹமாஸ் “உலகம் முழுவதும் உள்ள அப்பாவிகளை தாக்குவதற்காக வெளிநாடுகளில் தனது வன்முறை நடவடிக்கையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்தது” என்பதை நிரூபிக்கும் “கணிசமான” தகவல்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ள ஹமாஸ் தளபதிகளிடமிருந்து தாக்குதல்களுக்கான இலக்குகள், அதனை முன்னெடுப்பவர்கள் குறித்த பல்வேறு தகவல்கள் […]

இலங்கை

மயிலத்தமடு பசுக்களுக்கும் காளைகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து யாழில் போராட்டத்திற்கு அழைப்பு!

  • January 14, 2024
  • 0 Comments

தமிழர்களின் பட்டிப் பொங்கலன்று மட்டு மயிலத்தமடு பசுக்களுக்கும் காளைகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் சார்பில் தென்கயிலை ஆதீன தவத்திரு அகத்தியர் அடிகளார் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில்,மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல்தரையில் அத்துமீறி குடியேறவும் பயிர்செய்யவும் முனையும் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ச்சியாக அங்கு மேய்ச்சலில் ஈடுபடும் பசுக்களுக்கும் காளைகளுக்கும் சொல்லொணாத் துயரங்களை ஏற்படுத்தி வருகின்றனர் வெங்காய […]