ஐரோப்பா

பிரித்தானியப் பயணிகளுக்கு சிறந்த தேர்வாக மாறும் இத்தாலி

  • September 7, 2023
  • 0 Comments

அடுத்த ஆண்டு பிரித்தானியப் பயணிகளின் சிறந்த தேர்வாக இத்தாலி உருவாகிறது. தற்போது அது ஸ்பெயினின் அதே அளவிலான பிரபலத்தைக் கோரவில்லை என்றாலும், இத்தாலி ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பிரிட்ஸைக் கவர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும், இத்தாலி மொத்தம் 4.1 மில்லியன் பிரித்தானிய பார்வையாளர்களை வரவேற்றது, பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளிடையே நான்காவது மிகவும் பிரபலமான இடமாக அதன் இடத்தைப் பாதுகாத்தது. கோடையில் இத்தாலியின் வெப்பமான வானிலை, அதன் அழகிய நிலப்பரப்புகள் மற்றும் நீல கடற்கரைகள் மற்றும் […]

அறிந்திருக்க வேண்டியவை

இன்னொரு பூமியை கண்டுபிடித்த ஜப்பான் விஞ்ஞானிகள்

  • September 7, 2023
  • 0 Comments

வான்வெளியில் தற்போது பூமியை போன்ற கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது பூமியை போன்ற கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கிண்டாய் பல்கலைக்கழகத்தின் பாட்ரிக் சோபியா லிகாவ்கா மற்றும் டோக்கியோவில் உள்ள ஜப்பானின் தேசிய வானியல் ஆய்வகத்தின் தகாஷி இடோ ஆகியோரின் சமீபத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த கிரகம் பூமி போன்று இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் நெப்டியூன் கோளுக்கு அடுத்துள்ள பகுதி கைபர் பட்டை எனப்படுகிறது. இது பனி […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஜப்பானில் சமையலில் அசத்தும் தொழில்நுட்பம்!

  • September 7, 2023
  • 0 Comments

சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்றாலே அதற்கு உலகெங்கிலும் மவுசு அதிகம். இதற்கு இந்தியா ஒன்றும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் சீனப் பொருட்கள் அதிகமாக விற்கப்பட்டாலும், அவை நீண்ட காலம் நீடிப்பதில்லை. இதனாலேயே சீன தயாரிப்புகளை வாங்குவதற்கு முன் மக்கள் பலமுறை சிந்திக்கின்றனர். ஒரு பொருள் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று மக்களுக்குத் தெரிந்தாலே, இது நல்ல தரத்துடன் இருக்குமா? பாதுகாப்பானதாக இருக்குமா? என சிந்திப்பார்கள். அதிலும் சமையலறையில் பயன்படுத்தப்படும் சாதனமாக இருந்தால், அந்த சாதனத்தால் ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற […]

ஆசியா

விமான நிலையத்தில் இறந்து கிடந்த ஆஸ்திரேலிய நாட்டவர்

  • September 7, 2023
  • 0 Comments

தாய்லந்தின் பேங்காக்கில் உள்ள சுவர்ணபூமி (Suvarnabhumi) விமான நிலையத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அவருக்கு வயது 82 எனதெரியவந்துள்ளது. விமான நிலையத்தின் இரண்டாம் மாடியில் இருந்த இருக்கைகளில் பேச்சுமூச்சின்றிப் படுத்துக் கிடந்ததாக தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் சுமார் 8 மணி அளவில் அந்த நபரின் மரணத்தைப் பற்றி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அவர் குறைந்தது 3 மணிநேரத்திற்கு முன்பே இறந்துவிட்டார் என்று நம்பப்படுகிறது. விமான நிலைய அதிகாரிகள் அந்த இடத்தைச் சுற்றிவளைத்ததாகவும் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 3 மில்லியன் யூரோக்கள் மோசடி செய்த பேராசிரியர்

  • September 7, 2023
  • 0 Comments

ஜெர்மனியின் முன்சன் பொது வைத்தியசாலையில் கடமையைாற்றிய ஒருவர் மோசடிகளில் ஈடுப்பட்டமை தெரியவந்து இருக்கின்றது. முன்சன் யுனிவர்சிடர் கிள்னிக் என்று சொல்லப்படுகின்ற பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் மோசடி சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரியவந்து இருக்கின்றது. அதாவது இந்த வைத்தியசாலையின் பேராசிரியராக இருந்த ஒரு வைத்தியர் ஒரு சில நிறுவனங்களிடம் இருந்து சில வகையான பொருட்களை இந்த வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர்கள் கட்டாயமாக பெற வேண்டும் என்ற குற்றவியல் குழு ஒன்றை உருவாக்கியதன் மூலம் இலாபம் அடைந்ததாக தெரியவந்து […]

ஐரோப்பா

பிரான்ஸில் பாடசாலை வளாகம் ஒன்றில் ஏற்பட்ட பரபரப்பு

  • September 7, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பாடசாலை வளாகம் ஒன்றில் இருந்து 800 கிலோ எடையுள்ள குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Drôme மாவட்டத்தில் உள்ள Jules Verne எனும் ஆரம்ப பாடசாலை வளாகத்தில் இருந்து இந்த வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்து. சிறியது, பெரியது என மொத்தமாக 200 வெடிகுண்டுகள் இவ்வாறு மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து திருத்தப்பணிகள் இடம்பெற்று வருகிறது. அங்கு கிட்டத்தட்ட 800 கிலோ எடையுள்ள 200 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இரண்டாம் உலகப்போரைச் சேர்ந்த வெடிகுண்டுகள் எனவும் […]

இலங்கை

செனல் 4 வெளியிட்ட காணொளி – முக்கிய பிரபலம் வெளியிட்ட பரபரப்பு தகவல்

  • September 7, 2023
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் செனல் 4 வெளியிட்ட தகவல்களை தாம் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ராஜபக்சவே பொறுப்பு என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்திய புலயாய்வு பிரிவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் […]

இலங்கை செய்தி

இந்திய இராணுவம் மீண்டும் வடக்கில்…? சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை

  • September 6, 2023
  • 0 Comments

இந்திய இராணுவத்தை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான பின்னணியை உருவாக்க வேண்டாம் என  பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இதனை இலங்கை அரசாங்கத்திடம் கோரவுள்ளதாக தெரிவித்தார். பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வடக்கு – கிழக்குப் பிரச்சினையைத் தீர்க்கப் போவதன் முடிவுகள் ஆபத்தானதாக அமையும் என எம்.பி அங்கு தெரிவித்தார். ஏதேனும் போராட்டச் சூழல் ஏற்பட்டால், அந்த மாகாணங்களில் மீண்டும் நிலைநிறுத்த இந்திய இராணுவத்துக்கு அதிகாரமும் வாய்ப்பும் கிடைக்கும் […]

இலங்கை செய்தி

எங்கள் குடும்பத்தின் மீது சனல் 4விற்கு கடும் கோபம் இருக்கின்றது!!! நாமல் எம்.பி

  • September 6, 2023
  • 0 Comments

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த காலத்திலிருந்து சனல் 4 ராஜபக்ஷக்களுடன் வரலாற்றுப் போட்டியைக் கொண்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 வெளியிட்ட காணொளி நம்பகத்தன்மை இருந்தால் ஏன் அதனை தமது இணையத்தளத்திலிருந்து நீக்கியது என பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றில் இன்று பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சனல் 4 இன் சமீபத்திய காணொளி, பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக ராஜபக்சக்களை பழிவாங்கும் மற்றொரு முயற்சியாக […]

இலங்கை செய்தி

குழந்தைகள், பெண்கள் பிச்சை எடுக்க பயன்படுத்தப்படுவதை தடுக்க திட்டம்

  • September 6, 2023
  • 0 Comments

சிறுவர்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலும் பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி வருவதாகக் கூறியுள்ள இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ், உள்ளுராட்சி அதிகாரிகள் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பூர்வாங்க கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார். இராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க மற்றும் அனுபா பாஸ்குவல் ஆகியோர் தலைமையில் பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் […]