செய்தி

யாழில் ஒருதலை காதலால் விபரீதம் – காதலன் செய்த அதிர்ச்சி செயல்

  • September 16, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம், தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோடு வீட்டு உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த தாக்குதலில் ஐந்து பேர் காயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் உள்ள யுவதியை காதலித்ததாகவும் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறிய போது பெற்றோர் மறுத்திருந்த நிலையில் குறித்த இளைஞன் தனது […]

அறிந்திருக்க வேண்டியவை

பிடிக்காத வேலையை பிடித்து செய்வது எப்படி..?

  • September 16, 2023
  • 0 Comments

வேலையை திருப்தி இல்லாமல் மனக்கவலையுடன் செய்வது பொதுவான பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கர்களிடையே இது குறித்த ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில், மூன்றில் ஒரு பகுதியினர் தாங்கள் செய்யும் வேலை தங்களுக்கு பிடிக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். நடைமுறையில், உங்க்ளுக்கு பிடிக்காத வேலையை பிடிக்க வைக்க சில வழிகள் இருக்கின்றன. செய்யும் வேலையில் திருப்தி அடைவது உங்களது மன அமைதிக்கும் உதவும். நம்மில் பலர் பிடிக்காத வேலையில் மாட்டிக்கொண்டது போன்ற உணர்வுடன் இருப்போம். ஒரு நாளில் 8 மணி நேரம் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

வடகொரியா – ரஷ்யா இடையே புதிய உடன்பாடா? கிரெம்ளின் விளக்கம்

  • September 16, 2023
  • 0 Comments

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் தற்போதைய ரஷ்யப் பயணத்திற்கிடையே உடன்பாடுகள் ஏதும் கையெழுத்திடப்படவில்லை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டு கிரெம்ளின் விளக்கியுள்ளது. வடகொரியாவும் ரஷ்யாவும் ஆயுதங்கள் தொடர்பான உடன்பாட்டுக்குத் தயாராகி வரக்கூடுமென அமெரிக்கா அண்மையில் கவலை தெரிவித்திருந்தது. ஆனால் அப்படி ஏதும் திட்டமில்லை என்று கிரெம்ளின் பேச்சாளர் கூறினார். கிம் செவ்வாய்க்கிழமை ரஷ்யாவுக்குச் சென்றார். விளாடிமிர் புட்டினை புதன்கிழமை சந்தித்தபோது இருவரும் துப்பாக்கிகளைப் பரிசாகப் பரிமாறிக்கொண்டனர். வடகொரியாவுடனான மேம்பட்ட ஒத்துழைப்புக்குச் சாத்தியம் இருப்பதாகத் புட்டின் […]

பொழுதுபோக்கு

பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த நாள் இதோ வந்துவிட்டது….

  • September 16, 2023
  • 0 Comments

பிக்பாஸ் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த கிராண்ட் லான்ச் எப்போது என்பதை கமல் தன்னுடைய ஸ்டைலில் கூறி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். விஜய் டிவியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் உலகநாயகன் தான் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. போட்டியாளர்களின் மனம் நோகாதவாறு கண்டித்து அறிவுரை கூறி இவர் நிகழ்ச்சியை வழிநடத்தும் விதம் அனைவருக்கும் பிடித்தமானது. இதுவே நிகழ்ச்சியின் டிஆர்பியையும் நம்பர் 1-க்கு கொண்டு செல்லும். […]

வட அமெரிக்கா

அமெரிக்காவின் ஒரு பகுதியில் அனல்காற்றால் 202 பேர் மரணம்

  • September 16, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் Phoenix நகரில் 202 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் வீசிய அனல்காற்று காரணம் என்று Arizona மாநில அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். மேலும் 350க்கும் அதிகமான மரணங்கள் குறித்து விசாரிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அந்த மரணங்களுக்கும் சுட்டெரிக்கும் வெயிலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பீனிக்ஸ் நகரில் கடந்த ஜூலை மாதம் 31 நாட்களுக்கு வெப்பநிலை தொடர்ந்து 43 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. வரலாறு காணாத அனல்காற்று டெக்சஸ், நியூ மெக்ஸிகோ, அரிஸோனா, கலிஃபோர்னியா பாலைவனம் […]

வாழ்வியல்

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இந்த பதிவு

  • September 16, 2023
  • 0 Comments

இன்றைய காலகட்டத்தில்,தூக்கமின்மை என்பது ஒரு பெரிய உளவியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதில் குறிப்பாக மொபைல் போன்கள் இரவு நேரங்களில் நாம் தூங்குவதைத் தடுக்கும் ஒரு பெரிய காரணமாக அமைகிறது.’அளவுக்கு மிஞ்சினால்அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழி போல் ,முறையற்ற மொபைல் போன்களின் பயன்பாடு அதற்கு நாம் அடிமையாக்குவதோடு , பலர் இரவு நேரங்களில் தூக்கமின்றி அவதிப்படுகின்றனர். தூக்கம் இல்லையெனில், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு பிரச்சனையாகும். இது கவலை, மன அழுத்தம், உடல் எடை […]

ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் விடுதிகளுக்கான வாடகை செலவுகள் அதிகரிப்பு

  • September 16, 2023
  • 0 Comments

வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிகளுக்கான வாடகை செலவுகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பல கட்டுமான நிறுவனங்கள் இது தொடர்பில் புலம்புகின்றன. சில தங்கும் விடுதிகள் வாடகையை இரண்டு மடங்கு உயர்த்தி வசூலிப்பதாகவும் கட்டுமான நிறுவனங்கள் கூறியுள்ளன. பெரிய நிறுவனங்கள் சொந்தமாக தற்காலிக தங்குமிடங்களை அமைத்து தங்களிடம் வேலைபார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களை தங்க வைப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிறிய நிறுவனங்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும் தீர்வுகளைக் கண்டறிய சிரமப்படுவதாகவும் கூறியுள்ளன. சேனல் 8 செய்திக்கு பேட்டியளித்த […]

இலங்கை

இலங்கையர்களின் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

  • September 16, 2023
  • 0 Comments

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தற்போது கிடைக்கும் 9% நலன் அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்தார். ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்குச் சொந்தமான பணத்திற்கு வரி விதிக்கப்படுவதில்லை என்றும், நிதியத்திற்குச் சொந்தமான பணத்தை முதலீடு செய்த பின்னர் கிடைக்கும் இலாபத்திற்கு நூற்றுக்கு 14 சதவீதமாக மாத்திரமே வரி விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (15) நடைபெற்ற […]

உலகம்

மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள் – அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

  • September 16, 2023
  • 0 Comments

மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கத்தால் சுமார் 3,000 பேர் உயிரிழந்த நிலையில் மேலும பலர் தேடப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. சில கிராமங்கள் அரசாங்க உதவிக்கு இன்னமும் காத்திருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து பெறப்படும் உதவிக்கு மொரோக்கோ வரம்பு விதித்திருக்கிறது. ஸ்பெயின், பிரிட்டன், கத்தார், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய 4 நாடுகளின் மீட்புப் பணியாளர்கள் மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். உயிர் பிழைத்தவர்களுக்கு அரசாங்கம் உடனடி உதவிகளை அறிவித்துள்ளது. மீண்டும் வீடுகளைக் கட்டிக்கொள்ள நிதி […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கடும் நெரிசல் ஏற்படும் அபாயம்

  • September 16, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கடும் நெரிசல் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. பாடசாலை விடுமுறை காலம் வருவதால், அடுத்த சில நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பரபரப்பான காலகட்டத்தை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரிஸ்பேன்-மெல்பேர்ன் மற்றும் சிட்னி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். செப்டம்பர் பாடசாலை விடுமுறையின் போது 1.65 மில்லியன் பயணிகள் பிரிஸ்பேன் விமான நிலையத்தை கடந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் 1.3 மில்லியன் பேர் உள்நாட்டு விமானங்களில் ஈடுபடுவார்கள் […]