ஸ்டட்கார்ட்டில் நூற்றுக்கணக்கான எரித்திரியா எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கைது
ஜேர்மனியில் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட எரித்திரியா எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்டட்கார்ட் நகரில் எரித்திரியாவின் கலாச்சார விழா தொடங்க இருந்த நிலையில் வன்முறை ஆரம்பித்தது. எரித்திரியா அதிபர் இசயாஸ் அஃப்வெர்கிக்கு விசுவாசமான எரித்திரியா ஆட்சியின் ஆதரவாளர்களால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்ட பொலிசார் இரு எதிரெதிர் குழுக்களுக்கிடையில் “பாரிய வன்முறையில்” சிக்கிக் கொண்டதாக துணை போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். “வன்முறையின் அளவு அல்லது தீவிரம் முன்கூட்டியே தெளிவாகத் தெரியவில்லை” […]













