ஆசியா

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; டெல்லிவரை அதிர்வு!

  • October 3, 2023
  • 0 Comments

நேபாளத்தை மையமாகக் கொண்டு 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில் டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”நேபாளத்தில் இன்று மதியம் 2.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. […]

ஐரோப்பா

பின்லாந்தில் அறிமுகமாகியுள்ள டிஜிட்டல் பாஸ்போர்ட் திட்டம்..

  • October 3, 2023
  • 0 Comments

உலகில் முதன்முதலில் ஸ்மார்ட்போன் செயலி அடிப்படையில் செயல்படும் டிஜிட்டல் பாஸ்போர்ட்டை பின்லாந்து அறிமுகம் செய்துள்ளது. ஃபின்ஏர், ஃபின்னிஸ் போலீஸ் மற்றும் ஃபின்ஏவியா விமான நிலைய ஆபரேட்டருடன் இணைந்து கடந்த ஆகஸ்ட் 28ம் திகதி டிஜிட்டல் பாஸ்போர்ட்டுக்கான ஒரு பைலட் திட்டத்தை பின்லாந்து அரசு தொடங்கியது. பயண தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த டிஜிட்டல் பாஸ்போர்ட்களை சோதிப்பதற்கான ஒரு மிகப்பெரிய ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமைந்துள்ளது.முதலில் இந்த திட்டம் ஹெல்சின்கியில் இருந்து இங்கிலாந்து […]

இந்தியா

பொற்கோயிலில் உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு உதவியாக காய்கறிகளை சுத்தம் செய்த ராகுல் காந்தி!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சீக்கியா்களின் புனித தலமான அமிருதசரஸ் பொற்கோயிலில் இரண்டாவது நாளாகவும் பல்வேறு சேவைகள் செய்து வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். பஞ்சாபில் உள்ள பொற்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள உணவுக் கூடத்தில் பக்தர்கள் உபயோகித்த தண்ணீர் குவளைகள், தட்டுகளை சுத்தம் செய்தார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக பொற்கோயிலில் உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு உதவியாக காய்கறிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் […]

இந்தியா

இந்தியாவிற்கு நியமிக்கப்பட்ட தூதர்களை மீள அழைக்கும் கனடா!

  • October 3, 2023
  • 0 Comments

இந்தியாவிற்கு நியமிக்கப்பட்டுள்ள 41 கனேடிய தூதர்களை அழைத்து வருமாறு இந்திய அதிகாரிகள் கனடாவிடம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஃபைனான்சியல் டைம்ஸ் அறிக்கையை மேற்கோள் காட்டி, ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை, சம்பந்தப்பட்ட தூதர்களை அக்டோபர் 10 ஆம் திகதிக்குள் திரும்ப அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கனடாவில் வாழ்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவராக கருதப்படும் ஹர்தீப் சிங் நஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் கொல்லப்பட்டதற்கு இந்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது. ஆனால் […]

இலங்கை

திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் பிராந்திய சுனாமி உருவகப்படுத்தல் பயிற்சி!

  • October 3, 2023
  • 0 Comments

திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள கரையோர சமூகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் தயார்நிலையின் அளவை சோதிக்கும் வகையில் பிராந்திய சுனாமி உருவகப்படுத்துதல் பயிற்சி நாளை (04.10) நடைபெறவுள்ளது. பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ இன்று (03.10) பாராளுமன்றத்தில் இதனை அறிவித்தார். இலங்கையில் தேசிய மட்டத்தில் இருந்து கிராம மட்டம் வரை ஏற்படுத்தப்பட்டுள்ள சுனாமி முன்னெச்சரிக்கை பொறிமுறைகளை மதிப்பீடு செய்யும் நோக்கில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் இந்த பயிற்சியை முன்னெடுத்து வருவதாக பிரதி சபாநாயகர் […]

இலங்கை

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் திறமையற்ற ஊழியர்கள் இருப்பதாக குற்றச்சாட்டு!

  • October 3, 2023
  • 0 Comments

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பெருமளவிலான ஊழியர்கள் அரசியல் நியமனங்களின் அடிப்படையில் சேவையில் இணைந்துள்ளதாகவும், சுமார் 70 சதவீதமானோர், திறமையற்ற பணியாளர்களாக உள்ளதாகவும்,  அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வாய்மூல கேள்விக்கு பதிலளித்த அவர் மேற்படி கூறியுள்ளார். பல துறைகளில் பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், சில துறைகளில் பணியாளர்கள் உபரியாக இருப்பதாகவும் அவர் கூறினார். இந்நிலைமையின் அடிப்படையில் புதிய ஊழியர்களை நியமிக்கும் எண்ணம் இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தியா

இந்தியாவின் அரசு மருத்துவமனையில் ஒரேநாளில் 24 நோயாளர்கள் உயிரிழப்பு!

  • October 3, 2023
  • 0 Comments

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு நடத்தும் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பிறந்த குழந்தை உள்பட குறைந்தது 24 நோயாளிகள், உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 70 நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம், மும்பையிலிருந்து 25 கிலோமீட்டர் (கிமீ) தொலைவில் உள்ள தானே மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 18 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். குறித்த மரணங்கள் அனைத்தும் பணியாளர்கள் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கையில் தங்க நிலவரம் : வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

  • October 3, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி இன்று (03.10) கொழும்பு  செட்டியார்  வீதியில் 22 கரட் பவுண் ஒன்று 1 இலட்சத்து 53 ஆயிரமாக பதிவாகியுள்ளது. அதேபோல் 24 கரட் பவுண் ஒன்றின் விலை 1 இலட்சத்து 65 ஆயிரத்து 500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இது நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 69 ஆயிரத்து 500 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

ஐரோப்பா

பல ஆயிரம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை… இழப்பீடு கோரும் பெண்கள்!

  • October 3, 2023
  • 0 Comments

ஐரோப்பாவில் பூர்வக்குடி மக்களின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் வகையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்த விவகாரம் பல ஆண்டுகள் கழித்து தற்போது அந்த அரசுக்கு தலைவலியாக மாறியுள்ளது. ஐரோப்பாவில் 1960 காலகட்டத்தில் பூர்வகுடி மக்களின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சுமார் 4,500 பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டுள்ளது.இதில் சிலர் இளம் பெண்கள் எனவும் கூறப்படுகிறது.நடந்த இந்த சம்பவம் தொடர்பில் தற்போது கிரீன்லாந்தை சேர்ந்த 67 பெண்கள் டென்மார்க் அரசாங்கத்திடம் இழப்பீடு கோரியுள்ளனர். […]

பொழுதுபோக்கு

ஸ்ரீதேவி மரணம் – முதன்முறையாக மனம் திறந்தார் போனி கபூர்

  • October 3, 2023
  • 0 Comments

ஸ்ரீதேவி மரணம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த போனி கபூர், தற்போது முதன்முறையாக அதுபற்றி பேசி இருக்கிறார். 1980-களில் தமிழ், தெலுங்கி, இந்தி என ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் தன் அசாத்திய நடிப்பால் கொடிகட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. அந்த காலகட்டத்தின் லேடி சூப்பர்ஸ்டாரும் இவர்தான். சினிமாவில் பீக்கில் இருந்த ஸ்ரீதேவி கடந்த 1996-ம் ஆண்டு பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். போனி கபூர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவராக இருந்தாலும் அவர்மீதுள்ள […]