பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி திருகோணமலையில் துண்டு பிரசுரம் விநியோகம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட உள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக்கோரி திருகோணமலையில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீ காந்தா தலைமையில் உத்தியோகபூர்வமாக விநியோகிக்கப்பட்டது. எதிர்வரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து துண்டு பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த ஹர்த்தாலுக்கு இலங்கைத் தமிழரசு […]













