இலங்கை செய்தி

பலஸ்தீன் மீதான இஸ்ரேல் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் – எம்.எஸ் தௌபீக்

பலஸதீனுக்கு எதிராக இஸ்ரேல் நடாத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை எல்லா நாடுகளும் இணைந்து கண்டிக்க வேண்டும் எனவும் கடந்த பத்து நாட்களாக இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடாத்துவதை வன்மையாக கண்டிப்பதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

பலஸ்தீன் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படாமல் மின்சாரம், நீர் வசதிகளை நிறுத்தி தாக்குதல் நடாத்துகிறார்கள். மிக அண்மையில் வைத்திய சாலையில் கூட மிகக் கொடூரமாக தாக்குதல் நடாத்தி சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்கள் இழக்கப்பட்டிருக்கிறது.

உலகநாடுகள் அனைத்தும் மனிதாபிமானம், சாமாதானம் தொடர்பில் பேசுகிறோம், எத்தனையோ மாநாடுகள் நடாத்துகிறோம் அவ்வாறிருந்தும் இந்த இரக்கமற்ற தாக்குதல்கள் தொடர்பில் எந்த நாடுகளும் பேசாமல், யுத்தத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருக்கிறார்கள் எனவும் முஸ்லிம் நாடுகள் கூட அறிக்கைகள் மாத்திரம் விட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content