முன்னெச்சரிக்கை – அடுத்த சில நாட்களுக்கு கடும் வெப்பநிலையே நிலவும்
நாட்டின் அடுத்த சில நாட்களுக்கு கடும் வெப்பநிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று மாலை 04.00 மணி முதல் நாளை முழுநாளும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும், வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் நீரிழப்பைத் தடுக்கப் போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், சூரியனின் கடும் வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




