வேகப்பந்து வீச்சாளர் மத்திஷ பத்திரன உலக கிண்ண போட்டியில் இருந்து விலக்கப்படவுள்ளதாக தகவல்!
வேகப்பந்து வீச்சாளர் மத்திஷ பத்திரன இவ்வருட உலகக் கிண்ணத்தில் இருந்து விலக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவருடைய உடல் நிலையை கருத்திற் கொண்டே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, இலங்கை உலகக் கிண்ண அணியில் இருந்து மத்திஷ பத்திரனவை விடுவிக்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தொழில்நுட்பக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திஷாவுக்கு பதிலாக மேத்யூஸ் அல்லது சமிரா அணிக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் காயமடைந்த மகிஷ் […]













