உலகம்

புளோரிடாவில் இடம்பெற்ற பேரணியில் பைடனை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்!

  • November 9, 2023
  • 0 Comments

மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மீண்டும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றிப்பெறச் செய்து மக்கள் தன்னை மீண்டும் வெள்ளை மாளிகைக்கு அனுப்புவார்கள் என நம்புவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. புளோரிடாவின் ஹியாலியாவில் பேரணி ஒன்றை நடத்திய அவர், GOP விவாதம் குறித்தும், மற்ற போட்டியாளர்கள் குறித்த விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார். குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட விவாதத்தைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக தனது சொந்த நிகழ்வை நடத்த டிரம்ப் விருப்பம் […]

ஆசியா

இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனாமான நடவடிக்கைகள் – ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் மலேசியா

  • November 9, 2023
  • 0 Comments

ஹமாஸுடன் மலேசியா தனது உறவுகளைப் பேணுவதாகவும், பாலஸ்தீன பிரச்சினையை மலேசியர்கள் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என்றும் பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார். ஹமாஸிற்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது தடை விதிக்கும் அமெரிக்காவின் சட்ட வரைவிற்கு பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போது பிரதமர் அன்வர் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார். நீண்ட காலமாக பாலஸ்தீனர்களுக்கான ஆதரவு பரவலாக இருக்கும் மலேசியா போன்ற ஒரு நாட்டில் இது அரசியல் ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் வெளிநாட்டு […]

உலகம்

தீவிரமடையும் இஸ்ரேல் போர்: முழு போர் நிறுத்தம் கோராத ஜி7 நாடுகள்

ஹமாஸை அடக்கும்விதமாக இஸ்ரேல் தற்காப்பு நடவடிக்கையாக போரை மேற்கொண்டுள்ளதாக’ கூறி இஸ்ரேலுக்கு ஜி7 கூட்டமைப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காசாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளும்வகையில் ‘தற்காலிக போர் நிறுத்தம்’ தேவை என்பதை வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தற்காலிக போர் நிறுத்தம் வேண்டும் என்பதை டோக்கியோ கூட்டம் வாயிலாக இஸ்ரேலிடம் வலியுறுத்தினர். தற்காலிக போர் நிறுத்தம் மட்டுமே கோரியுள்ள ஜி7 கூட்டமைப்பு […]

இலங்கை

இந்திய மற்றும் திருகோணமலை ரோட்டரி கழக உறுப்பினர்களிடையே கலந்துரையால்

  • November 9, 2023
  • 0 Comments

திருகோணமலையில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் “கல்வி சக்தி” என்னும் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய ரோட்டரி கழக உறுப்பினர்களுக்கும் திருகோணமலை ரோட்டரி கழக உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் (09) இடம்பெற்றது. “கல்வி சக்தி” திட்டத்தின் மூலம் பின் தங்கிய கிராமப் பகுதியில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதட்கு சிறந்த ஆசிரியர்களை பயன்படுத்தி இணையம் மூலமாக கற்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் இந்தியாவில் இருந்து வருகை தந்த பெங்களூரு உல்சூர் ரோட்டரி கழகம […]

இலங்கை

காசாவில் தீவிரமடையும் போர் நடவடிக்கை : போர் நிறுத்தத்திற்கும் அழைப்பு!

  • November 9, 2023
  • 0 Comments

இஸ்ரேலியப் படைகள் வியாழன் அன்று காசா பகுதியின் வடக்கில் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்ட கட்டிடங்கள் மூலம் ஹமாஸ் போராளிகளுடன் தாக்குதல் நடத்தியுள்ளன. மேலும் பாலஸ்தீனப் பகுதி மீதான போர் தீவிரமடைந்ததால் இரு தரப்பும் தங்கள் எதிரிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறின. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தலைவர் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார் மற்றும் இரு தரப்பினரும் போர்க்குற்றங்களை இழைத்ததாகக் கூறினார். பாரிஸில், காசாவிற்கான மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைக்கவும், காயமடைந்த பொதுமக்கள் முற்றுகையிலிருந்து தப்பிக்க உதவும் வழிகளைக் […]

இலங்கை

தௌபீக் எம்.பி யினால் கிண்ணியா மத்திய கல்லூரியின் பாவனைக்காக நீர்த்தாங்கி கையளிப்பு

திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் அதிபரின் வேண்டுகோளுக்கமைய திருகோமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் யின் முயற்சியால் ISRC நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 5000 லீட்டர் நீர்த்தாங்கி செவ்வாய்க்கிழமை (09) பாடசாலை நிர்வாகத்திடம் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ISRC நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், பாடசாலை நிருவாகம் மற்றும் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.  

ஐரோப்பா

காஸாவில் பாலஸ்தீனியர்களின் இனப்படுகொலையை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்: ஸ்பெயின் மந்திரி

காசாவில் பாலஸ்தீனியர்களை “திட்டமிட்ட இனப்படுகொலை” என்று குற்றம் சாட்டிய இஸ்ரேலை தடை செய்ய ஸ்பெயின் மந்திரி சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஸ்பெயினின் சமூக உரிமைகளுக்கான அமைச்சரும், தீவிர இடதுசாரி Podemos கட்சியின் தலைவருமான Ione Belarra , உலகத் தலைவர்கள் வெளிப்படையான இரட்டை நிலைப்பாட்டைக் கண்டித்துள்ளார். மேலும் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயினும் பிற நாடுகளும் இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அக்டோபர் 7 […]

மத்திய கிழக்கு

சிரியாவின் அவிகாபாத் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா!

  • November 9, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் எப்-15 போர் விமானங்கள் சிரியாவின் அவிகாபாத் மீது நேற்று (08.11) மீண்டும் தாக்குதல் நடத்தியது. ஆயுதக் கிடங்குகள் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிப் படை மற்றும் அது ஆதரிக்கும் குழுக்களால் பயன்படுத்தப்பட்டதாக பென்டகன் கூறியது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் மத்திய கிழக்கில் சூடான சூழ்நிலை காரணமாக, ஈரானின் ஆதரவுடன் ஆயுதக் குழுக்கள் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகளை அக்டோபர் தொடக்கத்தில் இருந்து நாற்பது முறை தாக்கியுள்ளன. இவ்வாறான தாக்குதல்களால் 45 அமெரிக்க வீரர்கள் பலத்த […]

பொழுதுபோக்கு

அடி ஆத்தி.. சமந்தாவா இது.. அவங்களே போட்ட போஸ்ட்ட பாருங்க…

  • November 9, 2023
  • 0 Comments

சர்வதேச இதழான பஜார் ஃபேஷன் இதழின் அட்டை படத்தை அலங்கரிக்க படு போல்டாக நடிகை சமந்தா கொடுத்துள்ள போஸ் இணையத்தை ஒட்டுமொத்தமாக சூடாக்கி உள்ளது. நடிகை சமந்தாவை இன்ஸ்டாகிராமில் இந்தியளவில் 3 கோடி ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். அந்த ரசிகர்களுக்கு உங்கள் வாழ்க்கையில் இருந்து ஏதாவது சொல்ல விரும்புறீங்களா என பஜார் இந்தியா ஃபேஷன் இதழின் பேட்டியின் போது கேட்கப்பட்ட கேள்வியை பதிவிட்டு, அதற்கான பதிலும் செம சூப்பராக கொடுத்துள்ளார் சமந்தா. புஷ்பா படத்தில் ஓ […]

இலங்கை

இலங்கையில் பாடசாலை கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த இரண்டு ஆசிரியர்கள் கைது

வெலிமடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இசை வகுப்பறையில் கஞ்சா சுருட்டு புகைத்துக்கொண்டிருந்தபோது அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அநாமதேய தகவலாளரின் தகவலின் பேரில் கைது செய்யப்படும் போது சந்தேகநபர்கள் 1.9 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் அபேவிக்ரமின் தலைமையிலான பொலிஸ் குழு இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று வெலிமடை நீதவான் முன்னிலையில் […]