பரதநாட்டியம் குறித்து மௌலவியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஜம்இய்யதுல் உலமா சபை கண்டனம்!
இஸ்லாமியா மௌலவி ஒருவர் பரதநாட்டியம் தொடர்பில் தவறாக பேசிய விடயம் தற்பொழுது சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை அறிவிக்க இன்று (22) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. குறித்த ஊடக சந்திப்பில், மௌலவியின் கருத்திற்கு ஜம்இய்யதுல் உலமா சபை கண்டனம் வெளியிட்டுள்ளது. மதங்கள் மற்றும் கலாசார விடயங்கள் நிந்திக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே இதனை வன்மையாகக்கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மேலும் […]













