இலங்கை

பரதநாட்டியம் குறித்து மௌலவியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஜம்இய்யதுல் உலமா சபை கண்டனம்!

  • November 22, 2023
  • 0 Comments

இஸ்லாமியா மௌலவி ஒருவர் பரதநாட்டியம் தொடர்பில் தவறாக பேசிய விடயம் தற்பொழுது சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை அறிவிக்க இன்று  (22)   ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. குறித்த ஊடக சந்திப்பில், மௌலவியின் கருத்திற்கு ஜம்இய்யதுல் உலமா சபை கண்டனம் வெளியிட்டுள்ளது. மதங்கள் மற்றும் கலாசார விடயங்கள் நிந்திக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே இதனை வன்மையாகக்கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மேலும் […]

ஐரோப்பா

நீண்ட காலத்திற்கு பின் கிடைத்த  நல்ல செய்தி : கிரெம்ளின்!

  • November 22, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை நீண்ட காலத்திற்கு பின் கிடைத்த  நல்ல செய்தி” என்று கிரெம்ளின் பாராட்டியது. மனிதாபிமான இடைநிறுத்தங்கள் ஒரு நிலையான தீர்வுக்கான முயற்சிகளை உருவாக்குவதற்கான ஒரே வழி என்றும் கிரெம்ளின் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் அரசாங்கமும் ஹமாஸும் காசாவில் குறைந்தது நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதால் மேற்படி தெரிவித்துள்ளது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளரான  டிமிட்ரி பெஸ்கோவ், “ரஷ்யாவும் உலகின் பெரும்பாலான நாடுகளும் போர் நிறுத்தத்திற்கும் மனிதாபிமான இடைநிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்து வருகின்றன. ஏனெனில், இந்த வகையான […]

இலங்கை

முள்ளியவளையில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு…!

முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (22) காலை 11.30 மணியளவில் மாவீரர் பணிக்குழு தமிழ்த்தேசிய சமூக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஞானதாஸ் யூட்சன் தலைமையில் இடம்பெற்றிருந்தது. மாவீரர்களது பெற்றோர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு முதல் நிகழ்வாக உயிர்த் தியாகம் செய்த மாவீரரின் தந்தையான சவுந்தரம் மற்றும் முன்னாள் போராளி கர்த்தகன் ஆகியோரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்வின் இறுதியில் மாவீரர்கள் […]

இலங்கை

இன்னும் பத்து வருடங்களில் தலைவர் பிரபாகரன் யார் என கேட்கக்கூடிய நிலை தான் இங்கு உள்ளது – சி.வி.கே சிவஞானம்!

  • November 22, 2023
  • 0 Comments

இன்னும் பத்து வருடங்களில் தலைவர் பிரபாகரன் யார் என கேட்கக்கூடிய நிலை தான் இங்கு காணப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்தப்படும் “கார்த்திகை வாசம்” மலர்கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இன்னும் பத்து வருடங்களில் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் யார் என இருக்கக்கூடிய […]

வட அமெரிக்கா

கனடா-பிரம்டன் நகரசபை வளாகத்தில் பறந்த தமிழீழத்தேசியக்கொடி!

  • November 22, 2023
  • 0 Comments

கனடாவில் நேற்று பிராம்டன் நகர மண்டபத்தில் தமிழீழத்தேசியக்கொடி ஏற்றப்பட்ட வரலாற்று நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பிராம்டன் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்து வரலாற்று நிகழ்வை பதிவு செய்துள்ளார். தமிழீழத் தேசியக் கொடி தினத்தை முன்னிறுத்தி இந்த நிகழ்வு இடம்பெற்றது.அதேவேளை பிரம்டன் நகரசபை வளாகத்தில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் இது பதிவாகியுள்ளது. மாவீரர்களின் குருதியாலும், மக்களின் தியாகத்தாலும் நெய்யப்பட்ட தமிழீழத் தேசியக்கொடியை உலகின் அங்கீகாரத்திற்கு எடுத்துச் செல்லும் முதற்படியாக இந்த […]

ஆசியா

ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள தாய்லாந்து : விரைவில் சட்டத்திருத்தம்

  • November 22, 2023
  • 0 Comments

ஒரே பாலினத்தவர் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்ட வரைவுக்கு தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே பாலினத்தவர்கள் திருமணத்திற்கு தாய்லாந்தில் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பல முறை விவாதம் நடத்தப்பட்டும், எத்தகைய முடிவும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில், ஒரே பாலின திருமண முறை அனுமதிக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்த பியூ தாய் கட்சி கடந்த ஆகஸ்டில் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து பிரதமர் ஶ்ரீதா தவிசின் தலைமையில் சமிபத்தில் கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில் ஒரே பாலினத்தவர்களுக்கான […]

இலங்கை

ஆஸ்திரேலிய உயர்ஸ்த்தானிகரால் மட்டக்களப்பில் இன்று திறந்து வைக்கப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு நிலையம்

  • November 22, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலிய உயர்ஸ்த்தானிகர் சோபியா வில்கின்சனினால் மட்டக்களப்பில் முதன்முறையாக குழந்தைகள் பராமரிப்பு நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டது. சென் மேரிஸ் மோன்டேசரி ஹவுஸ் குழந்தைகள் பராமரிப்பு நிலைய பொறுப்பதிகாரி திருமதி ரஜினி பிரான்சிஸ் தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில், சர்வேதயா நிருவனத்தின் தலைவர் வின்யா ஆரியரத்ன, கொமர்சல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் சனத் மானதுங்க, சர்வதேச நிதி நிறுவனத்தின் இலங்கை நாட்டுக்கான முகாமையாளர் அலிஜன்ரொ, இந்நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் நிமாலி எஸ்குமாரி (சர்வோதயம்), மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் (சர்வோதயம்) […]

உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் ‘போருக்கு அப்பாற்பட்டது’ : போப் பிரான்சிஸ்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, போரைத் தாண்டி “பயங்கரவாதமாக” மாறியுள்ளது என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் தனது புதன்கிழமை பொதுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஹமாஸ் கைதிகளின் இஸ்ரேலிய உறவினர்கள் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் பாலஸ்தீனியர்களுடனான சந்திப்புகளின் போது “இரு தரப்பும் எவ்வாறு துன்பப்படுகின்றன” என்பதை நேரடியாகக் கேட்டதாகக் கூறினார். “இதைத்தான் போர்கள் செய்கின்றன. ஆனால் இங்கே நாம் போர்களுக்கு அப்பால் சென்றுவிட்டோம். இது போர் அல்ல. இது தீவிரவாதம்,” […]

இலங்கை

இலங்கையில் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைகள் பிற்போடப்படுமா?

  • November 22, 2023
  • 0 Comments

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (எப்ஆர்) மனுக்களில் ஒன்று இன்று (நவ.22) உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றைய மனுவை மனுதாரர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். அந்தவகையில், 2023 A/L பரீட்சை திட்டமிட்டபடி ஜனவரி 04 முதல் 31 வரை நடைபெறும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

‘ஹீரோயினுடன் படுத்து விட வேண்டும்” ஜீவா பட நடிகைக்கு நடந்த கொடுமை…

  • November 22, 2023
  • 0 Comments

வெளிநாட்டில் ஜீவாவின் படம் ஒன்றின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது எப்படியாவது அந்த ஹீரோயினுடன் படுத்து விட வேண்டும் என நினைத்த இயக்குநர் அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு அழைத்துள்ளார். ஆனால், அந்த இளம் நடிகை அதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில், காண்டான இயக்குநர் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட பாடல் காட்சியில் ஹீரோயினின் முகத்தையே காட்டாமல் படம் பிடித்ததாக பிஸ்மி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ஆனால், அந்த இயக்குநரின் பெயரை வெளிப்படையாக பிஸ்மி சொல்லாமல் மறைத்து விட்டார். மதிக்கத்தக்க இயக்குநர் என்று மட்டும் […]