ஆசியா

சிங்கப்பூர் விமான நிலையத்தில் பயன்பாட்டிற்கு வரும் AI செயற்கை நுண்ணறிவு முறை!

  • November 29, 2023
  • 0 Comments

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பயணிகளின் பாதுகாப்பு சோதனை நேரத்தை குறைக்க முடியுமா என்பதை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒருபகுதியாக, AI மற்றும் X-ray படங்களை தரும் இயந்திரத்தையும் பயன்படுத்தி கைப்பெட்டிகளை செக்-இன் சோதனை செய்யும் முறையை சாங்கி விமான நிலையம் சோதனை செய்து வருகிறது. இதனால் விமான நிலைய அதிகாரிகளின் செயலாக்க நேரம் குறையும் என்றும், மனித பிழையின் சாத்தியக்கூறுகளையும் அது குறைக்கும் எனவும் […]

உலகம்

10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய மிகப்பெரிய கடிகாரத்தை உருவாக்கிய பெரும் பணக்காரர்!

  • November 29, 2023
  • 0 Comments

10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய மிகப்பெரிய கடிகாரத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் Jeff Bezos, 10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை உருவாக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த 2011 ஆண்டு முதல் இந்த கடிகாரத்தை உருவாக்குவதற்கு அவர் நிதி வழங்கி வருகிறார். அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் Jeff Bezos, 500 அடி உயரம் கொண்ட இந்த கடிகாரத்தை டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Sierra Diablo மலையில் […]

இந்தியா செய்தி

திருச்சியில் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சடலம் – உயிருடன் எழுந்து அதிர்ச்சி

  • November 28, 2023
  • 0 Comments

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கண்ணூத்து அருகேயுள்ள பொன்னம்பட்டியை சேர்ந்தவர் காமநாயக்கர் மகன் 23 வயதான ஆண்டி நாயக்கர். கடந்த 4நாட்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த ஆண்டி நாயக்கர் உர மருந்தை அருந்தியுள்ளார். அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற போதிய பொருளாதாரம் இல்லை எனக்கூறிய காமநாயக்கர், தன் மகனை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வகையில் மாற்றம் செய்து […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவுடனான எல்லையை இரண்டு வாரங்களுக்கு மூடும் பின்லாந்து

  • November 28, 2023
  • 0 Comments

நோர்டிக் நாட்டிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களின் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் வருவதைத் தடுக்கும் முயற்சியில், ரஷ்யாவுடனான தனது முழு எல்லையையும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பயணிகளுக்கு ஃபின்லாந்து மூடும், இது மாஸ்கோவின் திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. பின்லாந்து கடந்த வாரம் ரஷ்யாவிலிருந்து வரும் பயணிகளுக்காக அதன் எல்லைச் சாவடிகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் மூடியது, ஆர்க்டிக்கில் அமைந்துள்ள வடக்கு ராஜா-ஜூசெப்பி கிராசிங்கை மட்டும் திறந்து வைத்தது. ஆனால் இந்த கிராசிங் இப்போது மூடப்படும் […]

ஆசியா செய்தி

இம்ரான் கானின் விசாரணை குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  • November 28, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான விசாரணையை அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு சிறை வளாகத்திற்குள் திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் செவ்வாயன்று, அரசு ரகசியங்கள் கசிந்ததாகக் கூறப்படும் வழக்கு விசாரணை, தலைநகரில் இருந்து 34 கிமீ (21 மைல்) தொலைவில் உள்ள அடியாலா சிறை வளாகத்தில் நடைபெறும் என்று கூறியது, நீதிபதி அபுவல் ஹஸ்னத் சுல்கர்னைன் தனது குறுகிய உத்தரவில், கானின் குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரும், வழக்கில் குற்றம் […]

இலங்கை செய்தி

பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களை பாதுகாக்க விசேட திட்டம்

  • November 28, 2023
  • 0 Comments

பண்டிகைக் காலத்தில் சந்தையில் பாவனையாளர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும் அநீதியைத் தடுப்பதற்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நாளை (30ஆம் திகதி) முதல் ஜனவரி 15ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, அந்த காலப்பகுதியில், நுகர்வோர் அதிகாரசபையின் அனைத்து புலனாய்வு அதிகாரிகளும் விசேட சோதனைகளை மேற்கொள்வார்கள். மற்றும் நுகர்வோர் முறைப்பாடுகள் இருப்பின், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்களை வழங்குமாறு அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது. நாடு முழுவதும் உள்ள […]

இலங்கை செய்தி

அமைப்பாளர் பதவியில் இருந்து வடிவேல் சுரேஷ் நீக்கம்

  • November 28, 2023
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போது வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமையினால் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ், பசறை இளைஞர்கள் எதிர்காலத்தில் அரசியலில் பெரும் நம்பிக்கையுடன் இருப்பார்கள் என குறிப்பிட்டார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய அமைப்பாளராக லெட்சுமன் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார். சஜித் பிரேமதாசவிடம் இருந்து அவர் நியமனக் […]

இலங்கை செய்தி

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பின் முக்கிய வீதிகள்

  • November 28, 2023
  • 0 Comments

    கொழும்பில் இன்று (28) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக மருதானை பிரதேசத்தின் பல வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மரங்களின் கிளைகளும் சாலையில் விழுந்தன. இதேவேளை, தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாளை முதல் அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, தென், வடமத்திய […]

இந்தியா செய்தி

டீப்ஃபேக் காணொளிக்கு இலக்கான ரஷ்மிகா விடுத்துள்ள கோரிக்கை

  • November 28, 2023
  • 0 Comments

டீப்ஃபேக் காணொளிக்கு இலக்கான இந்திய நடிகை ரஷ்மிகா மந்தனா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது போன்ற போலியான காணொளிகள் பகிரப்படுவதை தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற காணொளிகள் மூலம் தங்களை துன்புறுத்துபவர்களுக்கு எதிராக இளம் பெண்கள் நிற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தவிர, இதுபோன்ற சம்பவங்களை சாதாரணமாக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். மேலும் கருத்து தெரிவித்த அவர், டீப்ஃபேக் காணொளி காரணமாக தாம் எதிர்கொண்ட நிலைமை மிகவும் பயங்கரமானது […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் இருந்து புதிய வகை காய்ச்சல் வைரஸ் பதிவானது

  • November 28, 2023
  • 0 Comments

  இங்கிலாந்தில் முதன்முறையாக flu வைரஸின் புதிய திரிபு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். AH1N2 என்ற வைரஸ் திரிபு குறித்த நபரை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்த் யோர்க்ஷயர் மாகாணத்தில் பொது சுகாதாரப் பரிசோதனையின் போது குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சமீப தசாப்தங்களில் பல்வேறு நாடுகளில் இந்த வகை இன்ஃப்ளூயன்ஸா அவ்வப்போது பதிவாகியுள்ளது, ஆனால் இது இன்னும் மக்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.