இந்தியா- 2500 பயணிகளை தவிக்க விட்டு நடுவழியில் இறங்கி சென்ற ரயில் ஓட்டுநர்கள் !
உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் இரண்டு விரைவு ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், 2500 பயணிகள் கடும் அவதிக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஹர்சா-படெல்லி இடையே புதன்கிழமை அன்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதேபோல் பரோனி-லக்னோ இடையே சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட்டது. சாத் பூஜையை முன்னிட்டு இந்த இரண்டு சிறப்பு ரயில்களையும் வடகிழக்கு ரயில்வே இயக்கியிருந்தது. இதில் சுமார் 2500 க்கும் மேற்பட்டவர்கள் பயணித்தனர். புர்வால் சந்திப்பு அருகே வந்தபோது, மதியம் 1:15 மணியளவில் சஹர்சா […]













