ஐரோப்பா

மிதக்கும் சிறை – மறுப்பவர்களுக்கு பிரிட்டன் அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

  • August 8, 2023
  • 0 Comments

புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களில் தங்கவைப்பதால் ஆகும் செலவைக் குறைப்பதற்காக, அவர்களை மிதவைப்படகுகளில் தங்கவைக்கும் திட்டத்தில் முதல் படி எடுத்துவைத்துவிட்டது பிரித்தானிய அரசு. Barge எனப்படும் இந்த மிதவைப்படகுகள்தான் இனி புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்குமிடமாக ஆக்கப்பட உள்ளன. பல்வேறு தரப்பிலிருந்தும் இந்த மிதவைப்படகுத் திட்டத்துக்கு எதிர்ப்பு வந்தும், Bibby Stockholm என்ற பெயர் கொண்ட மிதவைப்படகில் 15 புகலிடக்கோரிக்கையாளர்கள் ஏற்றப்பட்டாயிற்று. அந்த மிதவைப்படகு 222 பேர் மட்டுமே தங்கும் வசதிகொண்டது என்றும், அதில் மிக அதிக எண்ணிக்கையிலானவர்கள் தங்கவைக்கப்பட இருப்பதாகவும், அத்துடன், […]

ஐரோப்பா

ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுப்பிடிப்பு!

  • August 8, 2023
  • 0 Comments

ஜேர்மனியின் Dusseldorf நகரில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டொன்று இனங்காணப்பட்டுள்ளது. நகரத்தின் மிருக காட்சிசாலைக்கு அருகில் குறித்த வெடிகுண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்காரணமாக குறித்த பகுதியில் இருந்து சுமார் 13000 மக்களை வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் குண்டு இனங்காணப்பட்ட 500 மீற்றர் சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியூடான போக்குவரத்தும் தற்காலிக்கமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை கடந்த […]

இலங்கை

OMP விசாரணை என்ற போர்வையில் அலைய விட்டு வெடிக்கை பார்க்கின்றது – மனுவல் உதயச்சந்திரா

  • August 8, 2023
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) தொடர்ந்தும் அவர்களின் உறவுகளை அழைத்து அலைய விட்டு வேடிக்கை பார்ப்பதாகவும் குறித்த நடவடிக்கையினை வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார். மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (8) காலை 10 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் […]

ஆசியா

தென் சீனக்கடல் விவகாரம்: தூதரக ரீதியான எதிர்ப்பை தெரிவித்த பிலிப்பைன்ஸ்

  • August 8, 2023
  • 0 Comments

உலகின் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றாக தென் சீனக்கடல் விளங்குகிறது. இங்கு சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தைவான் மற்றும் புருனே ஆகிய நாடுகளிடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது. சர்ச்சைக்குரிய இந்த கடற்பகுதியில் அமைந்துள்ள தாமஸ் ஷோல் தீவு, பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே இங்கு உணவு, நீர் மற்றும் எரிபொருள் போன்றவற்றை வழங்குவதற்காக பிலிப்பைன்ஸ் படகு சென்றது. இந்த படகை சீன ராணுவ கப்பல் மூலம் கடலோர காவல் படையினர் சேதப்படுத்தினர். சீனாவின் இந்த நடவடிக்கைக்கு […]

பொழுதுபோக்கு

தமிழ் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சல்மான் கான்

  • August 8, 2023
  • 0 Comments

பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான், தற்போது ‘டைகர் 3’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘ஏக் தா டைகர்’ படத்தின் மூன்றாவது பாகமாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சல்மான் கானுடன் இணைந்து கேத்ரீனா கைஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மணீஷ் சர்மா இயக்கியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு கொரானா காரணமாக தாமதமாக நடைபெற்று வந்தது. இதையடுத்து படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் தற்போது […]

இலங்கை

இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் பதற்றம்!

  • August 8, 2023
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்டவர்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குத்தகை மற்றும் கடன் செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று இன்று (08.08) காலை இலங்கை மத்திய வங்கியின் வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்துள்ளனர். இதன் காரணமாக அந்த இடத்தில் கடும் பதற்றமான சூழல் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பெண் ஒருவர் உட்பட 08 ஆண்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கையில் மின் துண்டிப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட கருத்து!

  • August 8, 2023
  • 0 Comments

நாட்டில் தொடர்ச்சியான மின்சார விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் மின்வெட்டை ஏற்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அமைச்சர், 24 மணி நேரமும் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு தேவையான கூடுதல் மின்சாரம் இலங்கை மின்சார சபையினால் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இன்று (08.08) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் எனவும் […]

இலங்கை

19 வயதான பெண்ணை காதலித்த 55 வயது நபருக்கு நேர்ந்த கதி : தமிழர் பகுதியில் சம்பவம்!

  • August 8, 2023
  • 0 Comments

19 வயதுடைய யுவதி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்ட 55 வயதுடைய நபர் ஒருவரே அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நேற்று (07.08) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மரத்தில் கட்டப்பட்டிருந்த நபரை மீட்டு தெலிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுன்னாகம் ஆர்முகன் தெருவைச் சேர்ந்த 55 வயதுடைய […]

இலங்கை

EPF குறித்து வெளியான அறிவிப்பு!

  • August 8, 2023
  • 0 Comments

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டம் நேற்று (0708) நடைபெற்ற நிலையில், மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கை

ஆயுதப்படையினரை களமிறக்க ஜனாதிபதி திட்டம்!

  • August 8, 2023
  • 0 Comments

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (8.08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுத்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.