உலகம்

கோபத்தில் பெண்ணொருவர் செய்த செயல்! சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

சீனாவில் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள நூடுல்ஸ் கடைக்கு சென்று வாடிக்கையாளர் ஒருவர் நூடுல்ஸ் விலை என்ன என்று கடைக்காரரிடம் கேட்டபோது, ஒரு கிண்ணம் நூடுல்ஸ் இந்திய மதிப்பில் ரூ.164 என்று விற்பனையாளர் கூறியுள்ளார். அப்போது வாடிக்கையாளர் விலை அதிகமாக உள்ளது என்றார். இது தொடர்பாக வாடிக்கையாளருக்கும் விற்பனையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் விற்பனையாளரின் மகன் எழுந்து வாடிக்கையாளரிடம் கோபமாக, “உங்களால் வாங்க முடியாது என்றால், வெளியேறு” என்று கூறினார். அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்து உடனே […]

பொழுதுபோக்கு

உச்சகட்ட எதிர்பார்ப்பை எகிற வைத்த விடுதலை – 2….

  • August 8, 2023
  • 0 Comments

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதத்தில்வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. விடுதலை படம் இரண்டாம் பாகத்துக்கு வெறும் 20 நாள் இருந்தால் போதும் என வெற்றிமாறன் சொன்னார். முதல் பாகம் எடுக்கும் போதே இரண்டாம் பாகம் முக்காவாசி முடிந்தது என்று கூட கூறினார். ஆனால் இப்பொழுது இன்னும் 100 நாட்கள் சூட்டிங் பாக்கி இருக்கிறது என்று கூறிக் கொண்டிருக்கிறார். அப்படி என்றால் […]

இலங்கை

  நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது!

  • August 8, 2023
  • 0 Comments

அரசியலமைப்பின் முக்கிய திருத்தமாக உள்ள 13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு கிடையாமு என பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று (07.08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அம்சங்களை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகள் முரண்பட்டதாக உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் […]

பொழுதுபோக்கு

‘புஷ்பா 2’ திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசில்! வெளியான ஃபர்ஸ்ட் லுக்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த படம், ‘புஷ்பா’. பான் இந்தியா முறையில் வெளியான இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். ஃபஹத் பாசில், சுனில், அனசூயா, தனஞ்செயா உட்படப் பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகிறது. முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் உருவாகும் இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து […]

இலங்கை

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இயந்திரம் செயலிழந்துள்ளது!

  • August 8, 2023
  • 0 Comments

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் உள்ள மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று இன்று (08.08) அதிகாலை முதல் செயலிழந்துள்ளது. இதனை சீரமைக்க 10 நாட்கள் ஆகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த யூனிட் மூலம் 240 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்பட்டு வருகின்றது.  இதற்கிடையில், ஜூன் மாதத்தில் இருந்து மற்றொரு ஜெனரேட்டர் பராமரிப்பு காரணமாக கணினியில் இருந்து அகற்றப்பட்டது. நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் தற்போது ஒரு மின் உற்பத்தி இயந்திரமே இயங்கி வருகின்றது. […]

தமிழ்நாடு

தமிழகத்தில் தாகத்திற்கு ஜூஸ் வாங்கி குடித்த சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • August 8, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் தமிழகத்தில் 10 ரூபாய் மாஸா பழ ஜூஸ் பாக்கெட்டில் செத்து போன எலி ஒன்று கிடந்துள்ள வீடியோ வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டம் பி.கே.புரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சீனிவாசன் மற்றும் நதியா. இவர்கள் உணவகம் ஒன்றினை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அப்போது, உணவகத்திற்கு அருகே உள்ள ஒரு பெட்டி கடையில் உள்ள 10 ரூபாய் […]

இந்தியா

12 துக்ளக் லேன் பங்களாவை திரும்ப பெற்ற ராகுல் காந்தி!

லோக்சபா எம்பி அந்தஸ்தை மீட்ட பிறகு ராகுல் காந்திக்கு 12, துக்ளக் லேன் பங்களா திரும்ப கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மக்களவை உறுப்பினர் பதவியை மீட்டெடுத்த ஒரு நாள் கழித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவரது பழைய அரசு பங்களா மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காந்தி தனது 12, துக்ளக் லேன் பங்களாவை ஏப்ரல் மாதம் காலி செய்து, தேசிய தலைநகரில் உள்ள தனது தாய் சோனியா […]

இலங்கை

PT6 விமானம் விபத்துக்குள்ளானதில் அறுவர் உயிரிழப்பு!

  • August 8, 2023
  • 0 Comments

இலங்கை விமானப்படையின் PT6 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 6 விமானிகள் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். விமான விபத்து குறித்து நாடாளுமன்றில் இன்று (08.08) கருத்து வெளியிட்ட அவர்,  இந்த விமானங்கள் 1958-ல் தயாரிக்கப்பட்டு, இன்னும் பைலட் பயிற்சிக்கு பயன்படுத்தப்படுவது ஏன் என்றும்  கேள்வி எழுப்பினார். இதுபோன்ற பழமையான விமானங்கள் பயிற்சிக்காக பயன்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது என்றும், அவற்றை பயிற்சிக்காக அல்ல, அருங்காட்சியகங்களில் வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். காஃபிர் போர் விமானங்களை பழுதுபார்ப்பதற்கு […]

இலங்கை

நாயாறு கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேர் கைது

  • August 8, 2023
  • 0 Comments

நாயாறு கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய டோலர் மீன்பிடி படகில் இருந்த 10 பேரை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும், முல்லைத்தீவு கடல் பகுதியில் நேற்று (07) அதிகாலை 2மணியளவில் திருகோணமலை கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமான முறையில் நாயாற்று கடல்பகுதியில் ரோலர் மீன்பிடி படகு ஒன்று நிற்பதனை அவதானித்துள்ளனர். பின்னர் குறித்த நபர்களிடம் விசாரணை செய்தபோது இந்தியாவில் இருந்து மீன்பிடிக்கு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைது […]

இலங்கை

ஜனாதிபதியிடம் இரகசிய புலனாய்வு பிரிவினர் வழங்கிய அறிக்கை!

  • August 8, 2023
  • 0 Comments

வறட்சி மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக எழுந்துள்ள அமைதியின்மையின் ஊடாக புதிய போராட்ட அலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதிக்கு இரகசிய அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளனர். இந்த எதிர்ப்பு அலையை தொடர்ந்து முன்னெடுக்க குழுவொன்று இணைந்துள்ளதாகவும், மக்களை வீதிக்கு இறக்கி கடந்த வருடம் இருந்த நிலைமையை மீண்டும் நாட்டில் கொண்டுவர அவர்கள் செயற்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு தண்ணீர் தருவதில்லை என்றும், உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் காட்டி மக்களை தண்ணீருக்காகப் […]