செய்தி வட அமெரிக்கா

குழந்தையை குளியலறையில் மூழ்கடித்த அமெரிக்க பெண் – 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை

  • August 22, 2023
  • 0 Comments

அயோவாவைச் சேர்ந்த 24 வயது பெண், தனது மகளை குளியல் தொட்டியில் மூழ்கடித்த குற்றத்திற்காக 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். டெய்லர் பிளாஹா என்ற பெண், அதிகாரிகள் தனது இரத்தத்தில் போதைப்பொருட்களைக் கண்டுபிடித்து, தங்கள் மூத்த குழந்தையின் பாதுகாப்பை நீக்கிவிடுவார்கள் என்று அஞ்சினார். பிளாஹா இரண்டாம் நிலை கொலைக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டார், மேலும் அவருக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டார். அவர் பரோலுக்கு தகுதி பெறுவதற்கு முன், 35 ஆண்டுகள் தண்டனையின் 70 சதவீதத்தை […]

ஆசியா செய்தி

தாய்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி கைது

  • August 22, 2023
  • 0 Comments

தாய்லாந்தின் முன்னாள் தலைவர் தக்சின் சினவத்ரா 15 ஆண்டுகள் நாடுகடத்தப்பட்ட பின்னர் ராஜ்யத்திற்கு திரும்பிய உடனே சிறையில் அடைக்கப்பட்டார், அவரது கட்சியின் வேட்பாளர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு. 74 வயதான கோடீஸ்வரர் பழைய ஊழல் குற்றச்சாட்டின் பேரில் எட்டு ஆண்டுகள் பணியாற்றும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, இருப்பினும் அவர் எவ்வளவு காலம் சிறைக்குப் பின்னால் பணியாற்றுவார் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில் அவரது பியூ தாய் கட்சி அரசாங்கத்தை உருவாக்குகிறது மற்றும் மென்மைக்கான […]

இலங்கை பொழுதுபோக்கு

இலங்கையில் கால்பதித்தது “லைகா”.. முதல் படம் என்ன தெரியுமா?

  • August 22, 2023
  • 0 Comments

லைகா நிறுவனம் தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடக்ஸன் நிறுவனத்தை இலங்கையில் இன்று அங்குரார்பணம் செய்கின்றது. இந்த அங்குரார்பண நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்திரா நட்சத்திர ஹோட்டலில் இன்றிரவு மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் கலந்துகொள்ளவுள்ளார். இலங்கை சினிமாக்களை தயாரிக்கும் நோக்கில் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனம் தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடக்ஸன் நிறுவனத்தை இலங்கையில் அங்குரார்ப்பணம் செய்துள்ள நிலையில், அதன் முதல் […]

இலங்கை

அதிகரிக்கும் போதைப் பொருள் பாவனை! சடலத்துடன் வீதிக்கு இறங்கி போராடிய மக்கள்

போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த கோரியும், இறந்தவருக்கு நீதி கோரியும் வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (22.08) முன்னெடுக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு சென்றிருந்த இளம் குடும்பஸ்தரை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இருவர் அழைத்து கதைத்துள்ளனர். இதன்போது, குறித்த இளம் குடும்பஸ்தரை தாக்கி நிலத்தில் தூக்கி போட்டுள்ளனர். இதனால் இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார். அங்கு நின்றவர்கள் அவரது வீட்டிற்கு தகவல் வழங்கியதையடுத்து, படுகாயமடைந்த குடும்பஸ்தரின் தாயார் வருகை […]

உலகம் செய்தி

2050க்குள் உலகளவில் ஒரு பில்லியன் மக்களுக்கு கீல்வாதம் ஏற்படும் அபாயம்

  • August 22, 2023
  • 0 Comments

2050 ஆம் ஆண்டில், உலகளவில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்கள் மூட்டுகளை பாதிக்கும் கீல்வாதத்துடன் வாழ்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது, 30 வயது அல்லது அதற்கு மேற்பட்ட உலக மக்கள்தொகையில் 15 சதவீதம் பேர் கீல்வாதத்தை அனுபவிக்கின்றனர், 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 30 வருட கீல்வாதம் தரவுகளை (1990-2020) ஆய்வு செய்த பின்னர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், 595 மில்லியன் மக்கள் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது 1990 இல் 256 மில்லியன் […]

இலங்கை

பிறந்தநாள் கொண்டாடுவதற்குச் சென்றவருக்கு நேர்ந்த கதி!

திருகோணமலை- நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிறந்தநாள் கொண்டாடுவதற்குச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று (22) பதிவாகியுள்ளது. திருகோணமலை- திருஞானசம்பந்தர் வீதியில் வசித்து வந்த கனகரத்னம் சிவக்குமார் (53வயது) என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர். பிறந்தநாளை கொண்டாடுவதற்கு சாம்பல்தீவு கடற்கரைக்கு ஆறு பேர் கொண்ட குழு சென்றதாகவும் அதில் மூவர் குளித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் இதனையடுத்து பொலிஸார் மற்றும் இளைஞர்களின் உதவியுடன் குறித்த நபரை […]

உலகம்

அணு மின் நிலையத்தின் நீரை கடலில் வெளியேற்றும் ஜப்பான்!

பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து கதிரியக்க நீர் வியாழக்கிழமை கடலில் விடப்படும் என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் காரணமாக புகுஷிமா அணுமின் நிலையத்திற்குள் கடல் நீர் புகுந்தது. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், குளிா்விக்கும் இயக்கம் நின்று போனது. அதையடுத்து, அந்த மின் நிலையத்தின் 3 அணு உலைகள் உருகின. அதிலிருந்த கதிரியக்க எரிபொருள்கள் கடலில் கலந்தன. இதையடுத்து, ஜப்பானில் இருந்து […]

இலங்கை

Ez கேஸ் மூலம் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்த சந்தேக நபர் கைது!

திருகோணமலை-மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை மொறவெவ பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். தொலைபேசி ஊடாக Ez கேஸ் மூலம் பணத்தை செலுத்திய பின்னர் குறித்த நபர் இளைஞர்களுக்கு போதை பொருளை விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த சந்தேக நபரை சோதனை இட்டபோது நான்கு ஹெரோயின் போதைப் பொருள் பக்கெட்டுகளை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரிய வருவதாவது- […]

இலங்கை

காலியில் அவசரநிலை பிரகடனம்!

  • August 22, 2023
  • 0 Comments

காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மத்தியில் பரவும் தொற்று நோய் காரணமாக சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சிறைச்சாலைக்குள் அனுமதிப்பதற்கும் கைதிகளை வெளியே அழைத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் தோல் தொற்று காரணமாக ஒன்பது கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இந்த நோயினால் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், அந்த மரணங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியா

முதல்வரின் காலில் விழுந்த ரஜினிகாந்த்!

  • August 22, 2023
  • 0 Comments

இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தார். இதன்போது உத்திரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு வந்த அவர் அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலின் விழுந்து வணங்கினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதாவதுஇ வயது குறைவாக இருந்தாலும் சன்னியாசியாக இருந்தால் காலில் விழுவேன்’ எனக் கூறியுள்ளார். இதேவேளை அவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்லர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் விபரமும் […]