இலங்கை

பிரான்ஸில் மீண்டும் வீதிக்கு இறக்கும் மக்கள் – 12,000 அதிகாரிகள் குவிப்பு

பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக மே 1 ஆம் திகதி நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், பாதுகாப்புக்காக 12,000 அதிகாரிகள் குவிக்கப்பட உள்ளனர்.

ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக இடம்பெற உள்ள 13 ஆவது நாள் போராட்டம் இதுவாகும். தலைநகர் பரிசில் 100,000 பேர் வரை ஒன்றிணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வன்முறைகளும் நிகழும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியத்துக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் பலத்த எதிர்வினைகள் எழுந்துள்ள நிலையில், மிகவும் ஆக்ரோஷமான ஆர்ப்பாட்டமாக இது அமைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து பரிசில் ஜொந்தாமினர் காவல்துறையினர் என மொத்தம் 5,000 அதிகாரிகள் சிவில் மற்றும் சீருடைகளில் கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதும் 12,000 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுவார்கால் எனவும் உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content