இலங்கை

இலங்கையில் 52 வயதான பெண் ஒருவருக்கு நடந்த கொடூரம்

மிஹிந்தலை பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டில் 47 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

மிஹிந்தலை, தொரமடலாவ பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தமது தாயுடன் வசித்து வந்த குறித்த பெண் நேற்று வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

அதன்போது, ​​பக்கத்து வீட்டில் வசித்துவந்த சந்தேக நபர், குறித்த வீட்டுக்குச்சென்ற அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

வெளியில் சென்று வீடு திரும்பிய குறித்த பெண்ணின் தாய் வீடு திரும்பி பார்த்தபோது, ​​மகள் படுக்கையில் சுயநினைவின்றி இருப்பதையும், சந்தேக நபரும் வீட்டில் இருப்பதையும் பார்த்துள்ளார்.

இதனையடுத்து, அவசர நோயாளார் காவுவண்டியை அழைத்துள்ளார். பின்னர் அங்கு வந்து மருத்துவ உதவியாளர்கள் அந்த பெண் உயிரிழந்துள்ளதை உறுதி செய்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்த மிஹிந்தலை பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content