செய்தி தமிழ்நாடு

எதிர் கட்சி தலைவர் குற்றச்சாட்டு..!

தாம்பரம் மாநகராட்சி பட்ஜட் மக்களுக்கனது அல்ல ஆளும் கட்சிக்கும் அதிகாரிகளுக்குமான பட்ஜட் – எதிர் கட்சி தலைவர் சேலையூர் சங்கர் குற்றச்சாட்டு

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 3 மண்டலத்தில் எந்த வித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என ஆளும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு.

தன்னிச்சையாக முடிவு செய்து தாம்பரம் மாநகராட்சிக்கான லோகோ வடிவமைக்கபட்டுள்ளது – மேயரிடம் மண்டல குழு தலைவர் வாதம்.

தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக தாம்பரம் மாநகராட்சிக்கு என தனி இலச்சிணை ( லோகோ) வை மேயை வசந்தகுமாரி அறிமுகம் செய்து துணைமேயர் காமராஜ் மற்றும் ஆணையர் முன்னிலையில் வெளியிட்டார்.

விமான நிலையம், தாம்பரம் விமானப்படைத்தளம் மலைகள், நீர்நிலைகள், தொழில் நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனங்களை உள்ளடக்கி லோகோ உருவாக்கப்பட்டுள்ளதாக துணைமேயர் காமராஜ் தெரிவிக்கையில் இது தன்னிச்சயான முடிவு என 4-வது மண்டல குழு தலைவர் காமராஜ் வாதம் செய்தார்.

மேலும் சில உறுப்பினர்கள் தாம்பரம் மாநகராட்சிக்கு உள்ளான பாரம்பரியத்தை கருத்தில் கொள்ளாமல் லோகோ உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

தாம்பரம் மாநகராட்சியின் முதல் பட்ஜட்டான  2023-24 ஆண்டுக்கான பட்ஜட்டை நிதி குழு தலைவர் தாக்கல் செய்தார். இதில்  பாதாள சாக்கடை திட்டம், குடிநீர், தெரு விளக்கு,மழை நீர் வடிகால், குடிசைப் பகுதிகளின் மேம்பாடு ஆகியவற்றிக்கான வரவு செலவு திட்டம் மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மொத்த வரவாக 702.23 கோடியும் செலவு கணக்காக 671.59 கோடி ரூபாய் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

பின்பு மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசுகையில் தாம்பரம் மாநகராட்சியில் சொல்லக்கூடிய அளவில் மக்கள் பணிகள் நடைபெறவில்லை என குற்றம் சாட்டினர். குறிப்பாக மண்டலம் 3 க்குட்டப்பட்ட பகுதியில் எந்த வித பணிகளும் நடைபெறவில்லை என்றும் 3வது மண்டலம் புறக்கணிக்கபடுவதாக  44- வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜா குற்றம்ச்சட்டினார்.

மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மன்றத்தில் சொல்லும் போது அது சம்மந்தமான துறை சார்ந்த அதிகாரிகள் குறிப்புகளை எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் குறைகளை சுட்டிக்காட்டும் போது நீங்கள் மிகைப்படுத்தி சொல்லாதீர்கள் உக்காருங்கள் என ஆணையர் ஆழகு மீனா கூறியது மன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கூட்டம் முடிந்த பின் மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சேலையூர் சங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த பட்ஜட் மக்களுக்கான பட்ஜட் இல்லை எனவும் மாறாக ஆளும் கட்சிக்கும் அதிகாரிகளுக்குமான பட்ஜட் என குற்றம்சாட்டினார்.மேலும் தாம்பரம் மாநகராட்சிக்கான லோகோவை தன்னிச்சையாக வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்

(Visited 1 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content