ஐரோப்பா செய்தி

பேருந்தில் 4 இளம் பெண்களின் அட்டகாசம்: மது போத்தலால் பயணியை பதம்பார்த்த கொடூரம்!

தென் லண்டன் பேருந்து ஒன்றில் நள்ளிரவில் நான்கு பெண்கள் பயணிகள் இருவரை மது போத்தலால் சரமாரியாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நான்கு இளம்பெண்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பொலிஸார், தற்போது பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். கொடூர தாக்குதலுக்கு இலக்கான ஆண் மற்றும் பெண் பயணிகள் இருவரும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, மார்ச் 25ம் திகதி அந்த நான்கு இளம்பெண்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். பெண் பயணி ஒருவரை போத்தலால் சரமாரிய தாக்கிய அந்த பெண்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் அருகாமையில் அமர்ந்திருந்த ஆண் ஒருவரை ஊன்றுகோலால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

 

 

இதனால், தலையில் காயம்பட்ட அந்த நபர் மருத்துவ சிகிச்சையை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்புடைய சம்பவமானது 2022 ஆகஸ்ட் 28ம் திகதி, தடம் எண் 250 ஸ்ட்ரீதம் பகுதியில் இருந்து க்ராய்டன் வரை செல்லக்கூடிய பேருந்தில் நடந்துள்ளது.

தாக்குதலை அடுத்து, அந்த நான்கு பெண்களும் பேருந்தில் இருந்து உடனடியாக வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. தற்போது புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், பொதுமக்களில் எவரேனும் இந்த பெண்களை அடையாளம் காண நேர்ந்தால், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளிக்க முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

 

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content