இலங்கை

செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினருக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை ஆரம்பம்

நாடு முழுவதும் உள்ள செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினருக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், செவித்திறன் குறைபாடுள்ள 50 பேருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்னோடித் திட்டம் இந்த வாரம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக சுட்டிக்காட்டினார்.

“அந்த 50 பேரும் மிகவும் வெற்றிகரமாக வாகனங்களை ஓட்டினார்கள். விபத்துகள் ஏதும் ஏற்படவில்லை” என்றார்.

அதன்படி, இந்த வாரம் முதல் நாடு முழுவதும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கால்களை இழந்த இராணுவச் சிப்பாய்கள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மருத்துவ அறிக்கையைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது அந்த கால அவகாசம் 04 வருடங்கள் 08 வருடங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அழகியவண்ண தெரிவித்தார்.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content