இலங்கை

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலங்களாக மீட்பு

வவுனியா – குட்செட் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்களின் நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

42 வயதான தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும், 36 வயதுடைய தாய், 09 வயது மற்றும் 03 வயதுடைய மகள்களின் சடலங்கள் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தாய் ஆசிரியையாக பணிபுரிந்து வருவதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்கொலை செய்து கொண்டவர் தனது வியாபாரத்திற்காக வாங்கிய கடனை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அதனை உறுதிப்படுத்தும் வகையில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content