இலங்கை

தாயின் முறைகேடான கணவனால் கொல்லப்பட்ட வாய் பேச முடியாத சிறுமி

பாணந்துறை பகுதியில் ஊமைச் சிறுமியொருவர் தாயின் பிரிந்த கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக ஹிரண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாணந்துறை ஹிரண, லேக் வியூ, பண்டாரகம கல்துடே, தம்மகித்தி ஆரம்ப பாடசாலையின் விசேட பிரிவில் கல்வி பயிலும் பல்பொல பகுதியைச் சேர்ந்த ரோஷினி கவிஷ்க பெரேரா என்ற 7 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் காணப்படுவதாகவும், வாயில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை இராணுவ சிறப்புப் படையின் சிப்பாய் எனவும் தாயும் சிறுமியும் சில வருடங்களுக்கு முன்னர் கைவிடப்பட்டவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சிறுமியின் தாயார், சிறுமியின் வாழ்வாதாரத்திற்காக பிச்சை எடுத்து வந்ததாகவும், அவர் கடையொன்றில் வேலைக்குச் சென்ற போது சந்தேக நபருடன் நட்பாக பழகியதாகவும் பெண்ணின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் சிறுமியின் தாயையும் சிறுமியையும் சந்தேக நபரால் தாய் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதுடன், அன்றைய தினம் முதல் சிறுமி கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் தாக்குதலால் சிறுமி பல நாட்களாக சுகயீனமுற்றிருந்த நிலையில் சிறுமியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு தாயோ பாட்டியோ முயற்சி எடுக்கவில்லை என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்று (7) காலை முதல் சிறுமி ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், வீட்டின் அறையொன்றில் தரையில் போடப்பட்டிருந்த பாயில் வைத்து உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமி உயிரிழந்துள்ளதை அறிந்த சந்தேக நபர் வீட்டை விட்டு ஓடிய போது  கைது செய்ததா ஹிரண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பாணந்துறை குற்றத்தடுப்பு நிலைய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர். மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட உள்ளது. 29 வயதான சந்தேக நபரும் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content