அமைதி முயற்சி: இறுதி முடிவுக்காக இந்தியா காத்திருப்பு!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
“அமைதி ஒப்பந்தமானது பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்கவும், கப்பல் போக்குவரத்து, வர்த்தகச் சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யவும் உதவும் என்று இந்தியா நம்புகின்றது.
எஞ்சிய பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தையில் ஒரு நிலையான இறுதி உடன்பாட்டை எட்டுவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் 19-ம் ஆம் திகதி கையெழுத்தாகிறது.
ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக திறக்கப்படுகிறது. அங்கு அமெரிக்க கடற்படையின் முற்றுகையும் உடனடியாக விலக்கி கொள்ளப்படுகிறது.





