உலகம் விளையாட்டு

உலகக்கோப்பைக்கான தகுதி வாய்ப்பை இழந்த ஜிம்பாப்வே அணி

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

இந்த உலகக்கோப்பை தொடருக்கு 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்பேயில் நடைபெற்று வருகிறது.

இதில் இலங்கை அணி ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மீதமுள்ள 1 இடத்துக்கு ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதையடுத்து இன்று நடைபெற்று வரும் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஜிம்பாப்வே – ஸ்காட்லாந்து அணிகள் ஆடின.

இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து தரப்பில் மைக்கேல் லீஸ்க் 48 ரன், மேத்யூ க்ராஸ் 38 ரன், பிரண்டன் மெக்முல்லன் 34 ரன்னும் எடுத்தனர்.

ஜிம்பாப்வே அணி தரப்பில் சீன் வில்லியம்ஸ் 3 விக்கெட்டும், சதாரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி விளையாடியது.

தொடக்கத்தில் தொடக்க வீரார்கள் ஜாய்லார்ட் கும்பி ரன் எதுவும் எடுக்காமல் , கிரேக் எர்வின் 2ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் சீன் வில்லியம்ஸ் 12 ரன்கள் .இன்னொசென்ட் கையா 12ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து சிகந்தர் ராஸா , ரியான் பர்ல் இணைந்து சிறப்பாக விளையாடினர் . நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். சிகந்தர் ராஸா 34ரன்களில் வெளியேறினார்.

அடுத்து வந்த வெஸ்லி மாதேவேரே சிறப்பாக ஆடினார். ரியான் பர்ல் வெஸ்லி மாதேவேரே இருவரும் இணைந்து பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். வெஸ்லி மாதேவேரே 40ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடிய ரியான் பர்ல் 83 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஜிம்பாப்வே அணி 41.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது . இதனால் ரன்கள் வித்தியசாத்தில் ஸ்காட்லாந்த்து வெற்றி பெற்றது.

இந்த தோல்வியால் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பைஜிம்பாப்வே அணி இழந்தது.

(Visited 9 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content