தமிழகத்தின் நிதி நிலைமை – வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்!
தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டதை தொடர்ந்து மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்காக உரையாற்றிய அவர், தமிழகத்தின் தற்போதை நிதி நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய தமிழக கஜானா காலியாகவுள்ளதாக தெரிவித்த அவர் இது தொடர்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
அத்துடன் நான் தேவதூதன் அல்ல, சமானிய மனிதன், பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்
மேலும் தன்னுடைய அரசியல் பயணத்தில் இவ்வளவு காலம் தன்னை பின்தொடர்ந்து வந்த மக்களுக்கு நன்றி கூறினார்.




