ஈரான்மீதான போர்: ட்ரம்ப் இன்று விசேட அறிவிப்பு!
President Donald Trump speaks during a meeting with Irish Prime Minister Leo Varadkar in the Oval Office of the White House, Thursday, March 12, 2020, in Washington. (AP Photo/Evan Vucci)
ஈரானுடனான போர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் Donald Trump நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார்.
அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலை அவரது உரை இடம்பெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஒரு மாத காலமாக நீடிக்கும் இந்த மோதலில் அமெரிக்கப் படையினருக்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து அவர் கருத்து வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் அமெரிக்காவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ட்ரம்பின் உரை இடம்பெறுகின்றது.





