வைரஸ் தாக்கம் : சுய தனிமைப்படுத்தலுக்கு அழைப்பு!
ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பலில் பயணித்த பிரித்தானிய பயணிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கப்பல் தற்போது டெனரிஃப் தீவிற்கு பயணித்துள்ளது.
இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமையின் (UKHSA) தலைமை அறிவியல் அதிகாரியான பேராசிரியர் ராபின் மே ( Robin May) “இந்த சொகுசுக் கப்பலில் நேரடியாகத் தொடர்பில்லாத பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவது குறைவு எனத் தெரிவித்துள்ளார்.
ஹன்டா வைரஸின் “மிகவும் தீவிரமான நிலை காரணமாக மக்கள் தங்களை எட்டு வாரங்கள் வரை” தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த கப்பலில் பயணித்த மூன்று பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 08 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.




