வெனிசுலா நிலநடுக்கம் – 05 நாட்கள் மீட்பு பணியில் 33 பேர் மீட்பு
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்று 05 ஆவது நாளாக தொடர்கிறது.
தற்போதுவரை இடிபாடுகளில் சிக்கியிருந்த 33 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயமானவர்களில் பெரும்பாலான குழந்தைகளும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த நிலநடுக்கங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1400 ஐக் கடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலமான கடலோர லா குவைராவில் வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.




