அமெரிக்காவின் அமைதித் திட்டம் குறித்து அலசி ஆராய்கிறது ஈரான்!
போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை ஈரான் தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றது.
ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் Esmail Baghaei மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேற்படி முன்மொழிவு குறித்து ஈரான் தனது கருத்துகளையும் , நிலைப்பாட்டையும் பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தி வருகின்றது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் முன்னெடுத்துவரும் சமரச பேச்சு தற்போது வெற்றிகரமான பாதையில் பயணிப்பதாக சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கமைய விரைவில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இது தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





