ஐரோப்பா செய்தி

ஹீத்ரோ விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தாமஸ் வால்ட்பி நியமனம்

கோபன்ஹேகன் விமான நிலையத்தின் தலைவராக இருந்த தாமஸ் வால்ட்பி, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, இந்த வருட இறுதியில் அவர் மேற்கு ஐரோப்பாவில் மிகவும் பரபரப்பான விமான நிலையத்தை பொறுப்பேற்பார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹீத்ரோ விமான நிலையம் கடந்த ஆண்டு மேற்கு ஐரோப்பாவின் பரபரப்பான விமான நிலையமாக மாறியது.

எவ்வாறாயினும், பிரித்தானிய விமான நிலைய ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக சம்பளத்திற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், கடந்த வாரம் 2,000க்கும் மேற்பட்ட விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்.

பின்னர், சம்பள உயர்வு தொடர்பாக அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கு உடன்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஹீத்ரோ விமான நிலையத்தின் தற்போதைய தலைவர் 12 வருட சேவைக்குப் பிறகு செப்டம்பர் 30 அன்று பதவியில் இருந்து விலகுகிறார்.

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content