இலங்கை

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!

எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் பாராளுமன்ற அமர்வுகளுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சமூகமளிக்க வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (28.08) இடம்பெற்ற அமைச்சரவைக் கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி செப்டெம்பர் 5, 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் அமைச்சர்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் தங்கியிருக்குமாறும் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இந்த திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை புறக்கணிக்க ஆளும் கட்சியின் குழுவொன்று தயாராகி வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மூன்று நாள் கால அவகாசம் வழங்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தது, அதற்கு ஆளும் தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்