இலங்கை

இலங்கையின் ஏற்றுமதியில் முன்னேற்றம்!

சமீபத்திய தரவுகளின்படி, நாட்டின் சரக்கு ஏற்றுமதி ஜூலை மாதத்தில் ஒரு பில்லியன் டாலர் அளவைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது, ​​ஜூலை மாதத்தில் இலங்கை வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி 1027.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இது 2.18 வீத அதிகரிப்பு என இலங்கை சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கடந்த ஆண்டு ஜூலையில் பதிவான எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 11.79 சதவீதம் குறைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆடைகள் மற்றும் ஜவுளிகள், ரப்பர் மற்றும் ரப்பர் தொடர்பான பொருட்கள், தேங்காய் மற்றும் தேங்காய் தொடர்பான பொருட்களுக்கான தேவை குறைவதால் சரக்குகளின் ஏற்றுமதி குறைந்துள்ளது என்று கருதப்படுகிறது.

இதேவேளை, இவ்வருடம் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் சேவை ஏற்றுமதியின் மதிப்பிடப்பட்ட பெறுமதி 1228.17 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 17.32 வீத அதிகரிப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்