பிரித்தானியாவில் மக்களின் கவனம் பெற்ற குப்பைக் கூடை மனிதர்
பிரித்தானியாவின் கிளாக்டன் இடைத்தேர்தலில் நைஜல் ஃபாரேஜ் Nigel Farage வெற்றிப் பெற்றுள்ளபோதிலும், குப்பை தொட்டியுடன் தோற்றமளிக்கும் மனிதர் பெரும்பாலனவர்களின் மனங்களை வென்று பேசுப்பொருளாகியுள்ளார்.
நைஜல் ஃபாரேஜ் Nigel Farage நன்கொடை தொடர்பான சர்ச்சையில் சிக்கிய பின் தனது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து கிளாக்டன் இடைத்தேர்தல் நடைபெற்று நிறைவுற்றுள்ளது.
இதில் வாக்கு எண்ணிக்கை மற்றும் வெற்றி தொடர்பில் அறிவிக்கும்போது ஃபாரேஜ் நிகழ்விடத்திற்கு சமூகமளிக்கவில்லை.
தான் கலந்துகொண்டால் போராட்டம் மற்றும் வன்முறைகள் இடம்பெறலாம் என்ற அச்சத்தால் அவர் சமூகமளிக்கவில்லை எனக் கூறினார்.
இதற்கிடையே இந்த இடைத்தேர்தலில் எந்தவொரு முக்கியக் கட்சியும் வேட்பாளரை நிறுத்தாததால் நைஜல் ஃபாரேஜ் Nigel Farage இலகுவாக வெற்றிப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரை எதிர்த்து கவுன்ட் பின்ஃபேஸ் (Count Binface), போட்டியிட்ட நிலையில், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
பின்ஃபேஸ் கிட்டத்தட்ட 9,500 வாக்குகளைப் பெற்றார், இது பதிவான வாக்குகளில் சுமார் 27% ஆகும்.




