பூனைகளிடம் இருந்து பரவும் ஒட்டுண்ணி – மனிதர்கள் பார்வை இழக்க வாய்ப்பு
பூனைகளிடமிருந்து பரவும் ஒரு ஒட்டுண்ணியால் மனிதர்களின் விழித்திரை பாதிப்படையும் என புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நிரந்தரமாக பார்வை பறிபோவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இவ்வாறு பாதிப்படையலாம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். டாக்சோபிளாஸ்மோசிஸ் (toxoplasmosis) என்ற இந்த நோயைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் முடியும் என்றாலும், உலக சுகாதார அமைப்பு (WHO) இதை ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயாக (NTD) முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். […]




