இலங்கை செய்தி

நீதிமன்றத்தில் வழக்கு ஆவணங்களை திருடிய இருவர் கைது!

  • May 31, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நில வழக்கு தொடர்பான ஆவணங்களை திருடியதாக குற்றச்சாட்டப்படும் இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எஸ்.எம். அன்பார் உத்தரவிட்டுள்ளார். திருகோணமலை துறைமுக பொலிஸார் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பிலான ஆவணம் திருடப்பட்டமை தொடர்பாக மாவட்ட நீதிமன்ற பதிவாளர் ராயப்பு ஜோமெல் ராய் குரூஸ், திருகோணமலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து, பிரதேச […]

ஐரோப்பா செய்தி

அடங்க மறுக்கும் இஸ்ரேல்: அவசர பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்கு பிரான்ஸ் அழைப்பு!

  • May 31, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்திற்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் லெபனானின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையைக் கைப்பற்றியதோடு, அந்நாட்டின் எல்லைக்குள் ஆழமாக ஊடுருவி வருவதை பிரான்ஸ் கடுமையாகக் கண்டித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் தற்காப்பு உரிமை உண்டு என்பதை அங்கீகரித்தாலும், லெபனான் நிலப்பரப்பை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை எதனாலும் நியாயப்படுத்த முடியாது என்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். வன்முறை மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும், அமைதியை […]

ஆஸ்திரேலியா செய்தி

பழைய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டு வியூகம் அமைக்கும் ஆஸ்திரேலியா

  • May 31, 2026
  • 0 Comments

ஆக்கஸ் (AUKUS) ராணுவ ஒப்பந்தத்தின் கீழ் ஆஸ்திரேலியா பெறவுள்ள அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அனைத்தும் அமெரிக்க கடற்படையிடம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள (Second-hand) நீர்மூழ்கிக் கப்பல்களாகவே இருக்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற பாதுகாப்புத் துறை தலைவர்களின் உயர்மட்ட மாநாட்டில் (Shangri-La Dialogue) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” ஆக்கஸ் (AUKUS) முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், ஆஸ்திரேலியா இரண்டு பழைய நீர்மூழ்கிக் கப்பல்களையும், ஒரு […]

உலகம் செய்தி

‘ஆபரேஷன் சிந்தூர்’- இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்தியது!

  • May 31, 2026
  • 0 Comments

தெற்கு ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா திகழ்கின்றது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் Pete Hexathon தெரிவித்துள்ளார். இந்தியா கடந்தாண்டு மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் பலத்தை உலக நாடுகள் அறியக்கூடியதாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார். ஆசிய-பசிபிக் பாதுகாப்பு உச்சி மாநாடு, சிங்கப்பூரில் உள்ள ஷாங்க்ரி-லா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் 44 ஆசிய-பசிபிக் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், ராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இங்கு உரையாற்றுகையிலேயே […]

உலகம் கல்வி

கடுமையான பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை!

  • May 31, 2026
  • 0 Comments

ஈரான்மீது தொடுக்கப்படும் எந்தவொரு ஆக்கிரமிப்பு முயற்சிக்கும் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். ஈரானின் எல்லைப்பகுதிகளை நோக்கி எடுக்கப்படும் எந்தவொரு பகைமை நடவடிக்கையையும் முந்தைய தாக்குதல்களை விடவும் பலமடங்கு ஆற்றலுடன் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஈரானிய இராணுவம் எதிரிகளின் சவால்களை முறியடிக்க உறுதியுடனும் முழு பலத்துடனும் நிலைபெற்றுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார். நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் பாரிய தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்!

  • May 31, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் பாரிய அளவிலான தரைவழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எல்லையோரக் குடியிருப்புகளுக்கு நிலவும் நேரடி அச்சுறுத்தல்களை நீக்குவதையும், ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்புகளை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இஸ்ரேலியப் படைகள் ஏற்கனவே Litani ஆற்றைக் கடந்து முன்னேறியுள்ளதோடு, Nabatieh போன்ற வடக்கு நோக்கி அமைந்துள்ள பகுதிகளுக்கும் தங்கள் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளன. தற்காப்பு வளையத்தை வலுப்படுத்தவும் தீவிரவாத ஊடுருவல்களைத் தடுக்கவும் கூடுதல் ராணுவ வீரர்கள் தற்போது களமிறக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் […]

அரசியல் இலங்கை செய்தி

ஹர்ஷ டி சில்வாவுக்கு நிதி அமைச்சு பதவி?

  • May 31, 2026
  • 0 Comments

“நிதி அமைச்சு பதவியை பெறுவதற்காக கலாநிதி ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்துடன் இணையவுள்ளார் என வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. அவர் ஐக்கிய மக்கள் சக்தியுடனேயே பயணிப்பார்.” இவ்வாறு ஐமசவின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஜித் பி பெரேரா எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “நிதி அமைச்சு பதவியை பெறுமாறு ஹர்ஷ டி சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு வழங்கப்பட்டாலும் அதனை ஏற்கும் நிலைப்பாட்டில் அவர் இல்லை. ரணில் விக்கிரமசிங்க […]

செய்தி விளையாட்டு

IPL சாம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா RCB?

  • May 31, 2026
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் 2026 போட்டி தொடரில் இறுதி ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி மற்றும் 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் 2-வது முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்குகின்றன. லீக் சுற்றில் ஆர்சிபி அணி முதலிடம் பிடித்து அசத்தியிருந்தது. தொடர்ந்து தகுதி சுற்று 1-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ஓட்டங்கள் […]

இலங்கை செய்தி

சுற்றுலாத் துறையில் இலங்கை சாதனை: சர்வதேசப் பட்டியலில் 18-வது இடம்!

  • May 29, 2026
  • 0 Comments

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவரும் இலங்கை, சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியுள்ளது. அத்துறையில் தனக்கென தனித்துவமான இடத்தை தக்கவைத்துள்ளது. இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா ஊடகமான TTW – Travel and Tour World வெளியிட்டுள்ள “2026 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த 50 பாரம்பரிய சுற்றுலாத் தலங்கள்” என்ற மதிப்புமிக்க சர்வதேசப் பட்டியலில் இலங்கை 18-வது இடத்தைப் பிடித்துள்ளது. மேற்படி சர்வதேசப் பட்டியலில் இந்தியா, பிரான்ஸ், பெரு, ஸ்பெயின் மற்றும் எகிப்து போன்ற நாடுகள் முன்னிலை […]

இலங்கை செய்தி

ஆளுங்கட்சி அரசியல் பிரமுகரின் மைத்துனர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

  • May 29, 2026
  • 0 Comments

திருகோணமலையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர் ஒருவரின் மைத்துனர், ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே 25 வயதான இவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த நபரை சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 2045 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.