இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகை மீட்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கவும் கோரி வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா செய்தி தமிழ்நாடு

இலங்கை படையினரால் தமிழக மீனவர்கள் கைது: முதல்வர் விஜய்யிடமிருந்து பறந்த கடிதம்

  • August 14, 2026
  • 0 Comments

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகை மீட்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கவும் கோரி வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்​பாக அவர் எழு​திய கடிதத்​தில், ” ஆகஸ்ட் 12 இரவு, IND-TN-10-MM-329 என்ற பதிவு எண்ணைக் கொண்ட மீன்பிடி இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருக்கிடையில் அவசர தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவாருங்கள்: ட்ரம்பிடம் அவசர கோரிக்கை

  • August 14, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருக்கிடையில் அவசர தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அண்மையில் அறிவித்த பரவலான வரி உயர்விலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனது கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் உறுதியளித்துள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீசி தெரிவித்துள்ளார். மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள ஈரானிய பெண் கால்பந்து வீராங்கனைகளின் எதிர்காலம் குறித்து நள்ளிரவில் இரு தலைவர்களும் […]

" மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் நோக்கிலேயே அரசியலமைப்பின் 22-வது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கும் சட்ட வியாக்கியானத்திற்கு அமையவே நாடாளுமன்றம் செயல்படும்" இலங்கை செய்தி

உயர்நீதிமன்ற வழிகாட்டலுக்கமைய செயல்படுவோம்: அரசு உறுதி

  • August 14, 2026
  • 0 Comments

” மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் நோக்கிலேயே அரசியலமைப்பின் 22-வது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கும் சட்ட வியாக்கியானத்திற்கு அமையவே நாடாளுமன்றம் செயல்படும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று மேலும் கூறுகையில்: “நாட்டில் நீண்டகாலமாகக் தேங்கிக் கிடக்கும் வழக்குகளைத் துரிதமாக விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த இரு தேர்தல்களின்போதும் நாட்டு மக்களுக்கு நாங்கள் உறுதியளித்திருந்தோம். அதற்கு அமைவாகவே தற்போது […]

"அரசியலமைப்பின் 22-வது திருத்தச் சட்டமூலமானது நாட்டிற்குக் கருப்புப் புள்ளியை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும்" என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாட்டுக்கு நல்லதல்ல – சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் போர்க்கொடி

  • August 14, 2026
  • 0 Comments

“அரசியலமைப்பின் 22-வது திருத்தச் சட்டமூலமானது நாட்டிற்குக் கருப்புப் புள்ளியை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும்” என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தெரிவித்தார். நீதித்துறை மறுசீரமைப்பு தொடர்பாகப் பரந்த அளவிலான கலந்தாய்வுகள் மற்றும் விவாதங்கள் அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் அவசரமாக முடிவெடுப்பது நாட்டிற்கு நல்லதல்ல என்றும் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்: “அரசியலமைப்பின் 22-வது திருத்தச் சட்டமூலம் என்பது தற்போதைய சூழலில் […]

"நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அதிகாரத்திற்கு வந்தேன். ஆபத்துகளை எதிர்கொள்ளாமல் அந்த மாற்றம் நிகழாது என்பதை நான் அறிவேன். எனவே, நாட்டு மக்களுக்காக எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன். அதனால் எனது பதவி பறிபோனாலும்கூட அதனை மனப்பூர்வமாக ஏற்று விலகத் தயார்" என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

மாற்றத்தை ஏற்படுத்துவேன்: பதவி பறிபோனால்கூட கவலையில்லை – அநுர

  • August 13, 2026
  • 0 Comments

“நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அதிகாரத்திற்கு வந்தேன். ஆபத்துகளை எதிர்கொள்ளாமல் அந்த மாற்றம் நிகழாது என்பதை நான் அறிவேன். எனவே, நாட்டு மக்களுக்காக எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன். அதனால் எனது பதவி பறிபோனாலும்கூட அதனை மனப்பூர்வமாக ஏற்று விலகத் தயார்” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியவை வருமாறு […]

காசா பகுதி முழுவதும் வாழும் பெரும்பான்மையான மக்கள் குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மை பேணத் தேவையான வசதிகள் இன்றித் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி

காசாவில் தண்ணீர் பஞ்சம்: லட்சக்கணக்கானோர் பரிதவிப்பு

  • August 13, 2026
  • 0 Comments

காசா பகுதி முழுவதும் வாழும் பெரும்பான்மையான மக்கள் குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மை பேணத் தேவையான வசதிகள் இன்றித் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. காசாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதியிற்கும் மேற்பட்டோர், அதாவது 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், குடிப்பதற்கும் , சமைப்பதற்கும் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 6 லிட்டருக்கும் (1.6 கேலன்) குறைவான நீரையே பெற முடிகிறது. அவசரகாலச் சூழல்களில் குடிப்பது, கழுவுவது மற்றும் […]

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மையின் கீழ் உள்ளதாக ஈரானியப் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) துணை அமைப்பான 'பசிஜ்' (Basij) அமைப்பின் தளபதி Hojjatoleslam Hossein Taeb) தெரிவித்துள்ளார். செய்தி

ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது: ஈரான் திட்டவட்டம்

  • August 13, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மையின் கீழ் உள்ளதாக ஈரானியப் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) துணை அமைப்பான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி Hojjatoleslam Hossein Taeb) தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் உள்ளதாக ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையிலேயே, மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. “ஹோர்முஸ் நீரிணையானது இன்று இஸ்லாமியக் குடியரசின் (ஈரான்) மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை பார்க்கிறீர்கள். நமது நாடு முழுமையான பாதுகாப்புடன் தன் பாதையில் தொடர்ந்து செல்கிறது” […]

UN Special Rapporteur concerned over proposed increase in judges’ retirement age இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து ஐ.நா. அறிக்கையாளர் அதிருப்தி

  • August 13, 2026
  • 0 Comments

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்குரிய அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் , நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரத்திற்கான ஐ.நாவின்சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சாட்டர்வைட் (Margaret Satterthwaite) கவலை வெளியிட்டுள்ளார். இந்த நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தையும், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு கடந்த 07 ஆம் திகதி அனுப்பிய கடிதத்தில், முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தம், அதன் தற்போதைய வடிவம் மற்றும் தாக்கங்களின் அடிப்படையில், நீதித்துறை சுதந்திரம் மற்றும் […]

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் பாதிப்பானது சுகாதாரத் துறையினரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக வேகமாகப் பரவி வருவதாகவும், வரலாற்றுப் பதிவுகளிலேயே மிகவும் பேரழிவை ஏற்படுத்திய எபோலா பாதிப்பாக இது மாறக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பேரழிவை ஏற்படுத்தும் எபோலா வைரஸ்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

  • August 13, 2026
  • 0 Comments

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் பாதிப்பானது சுகாதாரத் துறையினரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக வேகமாகப் பரவி வருவதாகவும், வரலாற்றுப் பதிவுகளிலேயே மிகவும் பேரழிவை ஏற்படுத்திய எபோலா பாதிப்பாக இது மாறக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) புதன்கிழமை கூறுகையில், தற்போதைய வேகத்தில் பரவினால், இந்த பாதிப்பானது 2014 முதல் […]

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தலைமன்னார் கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் நேற்றிரவு12) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் தலைமன்னாரில் கைது

  • August 13, 2026
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தலைமன்னார் கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் நேற்றிரவு12) கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் படகும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்தது. சர்வதேச கடல் எல்லையை மீறி, சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் தரைமட்ட இழுவலை முறையைப் பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னாருக்கு அழைத்துவரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.