இலங்கை செய்தி

விமல் வீரவன்சவுக்குப் பிணை

  • May 25, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 05 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1 சரீரப் பிணையின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவ வெற்றி கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்தில் அவர் இன்று (25) முன்னிலையானார். வாக்குமூலம் வழங்கயதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விமல் […]

ஐரோப்பா செய்தி

ஸ்கேன் அறிக்கை பணிக்கு தனியார் நிறுவனங்களை NHS அதிகம் நம்பும் நிலை – செலவு வேகமாக உயர்வு

  • May 25, 2026
  • 0 Comments

வைத்தியசாலைகளில் நோயறிதல் ஸ்கேன்களின் பகுப்பாய்வுக்காக தேசிய சுகாதார சேவை தனியார் நிறுவனங்களுக்கு செலுத்தும் தொகை அதிகரித்து வருவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. CT மற்றும் MRI ஸ்கேன்களை மருத்துவ ரீதியாக ஆய்வு செய்து அறிக்கை வழங்கும் பணியை வெளி நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதால் செலவுகள் “கட்டுப்பாட்டை மீறி அதிகரித்து வருகிறது” என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் பல மருத்துவமனைகள் வெளிப்பணி சேவைகளை அதிகம் நம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் இத்தகைய சேவைகளுக்கு சுமார் 241 மில்லியன் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் வேலையின்மையை குறைத்தால் நலத்திட்டச் செலவும் குறையும் – JRF ஆய்வு

  • May 25, 2026
  • 0 Comments

நலத்திட்ட உதவிகளைக் குறைப்பதை விட, வேலையின்மைக்கான அடிப்படை காரணங்களைத் தீர்ப்பதே அரசின் நலத்திட்டச் செலவைக் குறைக்கும் சிறந்த வழி என Joseph Rowntree (ரவுன்ட்ரீ) அறக்கட்டளை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, வேலை செய்யும் வயதுடைய மக்களில் 80 வீதமானோரை வேலைவாய்ப்பில் இணைக்கும் அரசாங்க இலக்கு நிறைவேற்றப்பட்டால், யுனிவர்சல் கிரெடிட் திட்டச் செலவில் சுமார் £10 பில்லியன் பவுண்ட் குறைப்பு ஏற்படும என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய செலவின் எட்டில் ஒரு பங்காகும் என பொருளாதார […]

உலகம் செய்தி

வரலாற்றை முன்வைத்து அமெரிக்காவுக்கு பதிலடி தரும் ஈரான்

  • May 24, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் குறையும் என்ற எதிர்பார்ப்பில் உலகம் காத்திருக்கும் நிலையில், இரு நாடுகளும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க பிராந்தியத்தின் வரலாற்று குறிப்புகளை அரசியல் செய்தியாக பயன்படுத்தி வருகின்றன. ஈரானிய அதிகாரிகள், “இறுதியில் பலவீனமானவரே வெற்றி பெறுவார்” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், தங்கள் நாட்டின் வரலாற்றிலிருந்து முக்கிய நிகழ்வுகளை மீண்டும் நினைவுபடுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, மூன்றாம் நூற்றாண்டில் பாரசீகர்களுக்கு […]

உலகம் செய்தி

எதிர்ப்பை குற்றமாக்க வேண்டாம் – லெபனான் அரசுக்கு ஹிஸ்புல்லா தலைவர் அழைப்பு

  • May 24, 2026
  • 0 Comments

ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் Naim Qassem, “எதிர்ப்பை குற்றமாக்கும் வகையில் லெபனான் அரசு எடுத்துள்ள முடிவுகளை திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய ஒன்பது பேருக்கு எதிராக  அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகள் “எங்கள் உறுதியை மேலும் வலுப்படுத்தும்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தடைகள் குறித்து உறுதியான நிலைப்பாடு எடுக்காததற்காக பெய்ரூட் அரசையும் அவர் விமர்சித்தார். அதேவேளை, லெபனானை ஆக்கிரமிப்பதே இஸ்ரேல் […]

உலகம் செய்தி

அணு ஆயுதம் உருவாக்கமாட்டோம் – மீண்டும் உறுதியளித்த  ஈரான்

  • May 24, 2026
  • 0 Comments

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என ஜனாதிபதி Masoud Pezeshkian உலக நாடுகளுக்கு மீண்டும் உறுதியளித்துள்ளார். இந்த உறுதியை நடைமுறைப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராகவும் திறந்த மனதுடனும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அணுசக்தி தொடர்பான விவகாரத்தில் உடனடி முடிவுகள் அல்லாமல், படிப்படியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஈரான் உள்ளது. தற்போது அனைத்து தரப்பினரின் கவனமும், குறிப்பாக தெற்கு லெபனானில் நடைபெறும் இஸ்ரேல் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தை எட்டுவதிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. […]

உலகம் செய்தி

ஈரானுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஹோர்மூஸில் அமெரிக்க முற்றுகை தொடரும் – ட்ரம்ப்

  • May 24, 2026
  • 0 Comments

“ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டு, சான்றளிக்கப்பட்டு, கையெழுத்திடப்படும் வரை, அந்த நீர்வழிப்பாதையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை முழு வீச்சில் தொடரும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். “இரு தரப்பினரும் அவசரப்படாமல், நிதானமாகச் செயல்பட வேண்டும்,” என்று ட்ரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். “தவறுகளுக்கு இடமில்லை , ஈரானுடனான நமது உறவு மிகவும் தொழில்முறை சார்ந்ததாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் மாறி வருகிறது,” என்றும் அவர் மேலும் கூறினார்.

உலகம் செய்தி

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் தொடர்பு – 09 பேருக்கு பஹ்ரைனில் ஆயுள் தண்டனை

  • May 24, 2026
  • 0 Comments

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) உடன் தொடர்பு வைத்து பஹ்ரைனுக்கு எதிராக “விரோத மற்றும் பயங்கரவாதச் செயல்களில்” ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே வழக்கில் தொடர்புடைய மற்ற இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பஹ்ரைன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் முக்கிய இணையதளங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்ததுடன், அதனுடன் தொடர்புடைய நிதி பரிமாற்றங்களுக்கும் உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உலகம் செய்தி

லெபனானில் 10 பகுதிகளுக்கு வெளியேற்ற உத்தரவு – இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை

  • May 24, 2026
  • 0 Comments

தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் உள்ள 10 நகரங்கள் மற்றும் கிராமங்களின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது. “ஹிஸ்புல்லா இலக்குகள்” மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கூறி இந்த கட்டாய இடப்பெயர்வு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தின் அரபு மொழி செய்தித் தொடர்பாளர் கர்னல் அவிச்சாய் அத்ராயீ, தாக்குதல் நடைபெறவுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் குறைந்தது 1,000 மீற்றர் தூரத்திற்கு உடனடியாக நகர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்ஹாரா, டெய்ர் […]

உலகம் செய்தி

கடந்த 24 மணித்தியாலங்களில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 33 கப்பல்கள் பயணம்

  • May 24, 2026
  • 0 Comments

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 33 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐ.ஆர்.ஜி.சி கடற்படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், எண்ணெய் டேங்கர்கள், கொள்கலன் கப்பல்கள் மற்றும் பிற வர்த்தகக் கப்பல்கள் இந்த பயணத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க இராணுவத்தின் செயல்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சிக்கல்களைத் தொடர்ந்து, அந்தப் பகுதியின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை ஐ.ஆர்.ஜி.சி கடற்படை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!